ESPNcricinfo தகவலின்படி, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து விலகும் முடிவை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள அட்டவணைப்படி தங்கள் குழுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் ஐசிசி கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அடம்பிடிப்பது ஏன்?
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்வதால் பிசிசிஐ உத்தரவுப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் ஐபிஎல் 2026 பட்டியலில் இருந்து நீக்கியது.
இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றக் கோரி ஐசிசி-யிடம் கோரிக்கையும் வைத்துள்ளது.