லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதியபோது கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்கவில்லை. இந்த போட்டியின்போது இந்திய அணியுடன் கைகுலுக்க வேண்டாம் என நடுவர் ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடம் கூறியதாகவும் இதனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்கும் வரை ஆசிய கோப்பையில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது.
ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்க மறுத்த ஐசிசி
இதனால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அணி நாடகம் ஆடியது. ஆனால் ஆன்டி பைக்ராஃப்ட்டை நீக்க ஐசிசி மறுத்து விட்டது.
இதனைத் தொடர்ந்து ஆன்டி பைக்ராஃப்ட் பாகிஸ்தான் கேப்டனிடனும், பாகிஸ்தான் மேனேஜரிடமும் மன்னிப்பு கேட்டதால், தாமதமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாட பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது.