ஐசிசி விருதை வென்று அசத்திய அஷ்வின்..!

First Published Mar 10, 2021, 6:52 PM IST

பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை அஷ்வின் வென்றுள்ளார்.
 

ஆண்டின் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி அங்கீகரித்து வந்த ஐசிசி, இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரரை தேர்வு செய்துவருகிறது. அந்தவகையில், ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸி.,க்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அசத்தலாக ஆடிய ரிஷப் பண்ட் அந்த விருதை வென்றார்.
undefined
பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு 3 வீரர்கள் நாமினேட் ஆகினர். இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அசத்தலாக ஆடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் இந்திய சீனியர் ஸ்பின் ஆல்ரவுண்டரான அஷ்வின் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் கைல் மேயர்ஸ் ஆகிய மூவரும் நாமினேட் ஆகினர்.
undefined
அவர்களில் அஷ்வின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு ஐசிசி விருதை வென்றார். இந்த தொடரில் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய அஷ்வின், 3வது டெஸ்ட்டில் 106 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். தொடர் நாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரூட்டுடனான போட்டியில் வென்று பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற ஐசிசி விருதை அஷ்வின் வென்றுள்ளார்.
undefined
click me!