#AUSvsIND நனவானது கிரிக்கெட் ரசிகர்களின் கனவு..!

First Published Nov 27, 2020, 10:33 AM IST

கொரோனாவால் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியில் ஐம்பது சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

கொரோனாவால் 4 மாதங்களுக்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் நடக்காமல் இருந்த நிலையில், ஜூலை முதல் கொஞ்சம் கொஞ்சமாக போட்டிகள் நடக்க தொடங்கின. ஆனால் ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அப்படித்தான் நடத்தப்பட்டது.
undefined
இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் தொடரில் ஐம்பது சதவிகித ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில், இன்று சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
undefined
இதையடுத்து சிட்னி ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த இந்திய ரசிகர்கள் சிட்னியில் குவிந்துள்ளனர்.
undefined
குடும்பத்துடனும் நண்பர்களாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் சிட்னி ஸ்டேடியத்திற்கு இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியை காண வந்துள்ளனர்.
undefined
இந்திய தேசிய கொடி வண்ணத்தை உடலில் பூசிய வீரர்களை உற்சாகப்படுத்திய காட்சியை கண்டு நீண்டநாள் ஆகிவிட்ட நிலையில், இதுபோன்ற ரசிகர் கூட்டம் கோலியை கூடுதல் உற்சாகப்படுத்தும்.
undefined
தீவிரமான இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.
undefined
click me!