இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது குறித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ், நீண்டகாலம் முன்பே ஐபிஎல் ஏலத்தின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து கோப்பையை வெல்லும் என்று நான் கூறியிருந்தேன். இப்போதும் அதையே கூறுகிறேன்.. குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வெல்லும். ஆர்சிபி அணி ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கும் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.