இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, அஜிங்க்யா ரஹானேவிற்கு பெங்களூரு ரொம்ப பிடிக்கும். பொதுவாகவே பெங்களூருவில் சிறப்பாக ஆடுவார். இந்த போட்டியிலும் நன்றாக ஆடினார். ஷிவம் துபேவும் அருமையாக ஆடினார். இதற்கு முன் துபே, ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளில் ஆடியிருக்கிறார். ஆனால் அங்கெல்லாம் இந்தளவிற்கு ஆடியதில்லை. தோனியின் கேப்டன்சியில் அருமையாக ஆடுகிறார். அதுதான் தோனிக்கும் மற்ற அணிகளுக்கு உள்ள வித்தியாசம். மற்ற அணிகள் வீரர்களை தேடுகின்றன. தோனி மட்டும்தான் வீரர்களை உருவாக்குகிறார் என்றார் ஆகாஷ் சோப்ரா.