ஒரு கேப்டனாக அணி தடுமாறும்போது முன்னின்று வழிநடத்த வேண்டிய ருதுராஜ், இந்த சீசனில் தனது தனிப்பட்ட பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. "கேப்டன்சி அழுத்தம் அவரது இயல்பான ஆட்டத்தைப் பாதித்துவிட்டது" என்று கிரிக்கெட் விமர்சகர்கள் ஒருபுறம் கூறினாலும், "ரன் அடிக்காத கேப்டன் எதற்கு?" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கிளம்பும் 'ரிப்பீட்' விமர்சனங்கள்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் #RuturajGaikwad மற்றும் #CSK ஹேஷ்டேக்குகள் ரணகளமாகி வருகின்றன.
"7 மேட்ச் தோற்றும் இன்னும் என்ன பிளான் வச்சிருக்கீங்க?"
"தோனி சொல்லிக்கொடுத்தது இதுதானா?"
"கேப்டன் பொறுப்பு ருதுராஜுக்கு பாரமாகிவிட்டது!"
என்பது போன்ற கமெண்ட்டுகள் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, தோல்விக்குப் பிறகு அவர் சிரித்தபடி சக வீரர்களுடன் பேசுவது ரசிகர்களின் ஆத்திரத்தை இன்னும் தூண்டியுள்ளது. "தோல்வி பயம் சிறிதும் இல்லாமல் இருப்பது கேப்டனுக்கு அழகல்ல" என பலரும் சாடுகின்றனர்.