குழந்தை பிறக்கும் போது கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன?

Published : Mar 04, 2023, 04:10 PM IST

ஒரு குழந்தை பிறக்கும் போதே அந்த குழந்தையின் கூடவே ஆயுள், கர்மா, வித்தம் (காசு, பணம்), வித்யா (கல்வி), மரணம் என்ற 5 விஷயங்களும் கூடவே பிறந்துவிடுகின்றன.  

PREV
16
குழந்தை பிறக்கும் போது கூடவே பிறக்கும் 5 விஷயங்கள் என்னென்ன?
ஆயுள்:

பிறக்கும் போதே விதியும் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. தலைகீழாக நின்னாலும் யாராலுயும் அவரவருக்கு என்று எழுதப்பட்ட விதியை மாற்றியமைக்க முடியாது.
 

26
வித்தம்:

உனக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது தான் உனக்கு கிடைக்கும். ஏழையாக இருந்து கோடீஸ்வரனாக வேண்டும் என்று விதி இருந்தால் கோடீஸ்வரனாக மாறுவாய். இல்லையென்றால், கடைசி வரை ஏழையாகத்தான் இருப்பாய்.

36
வித்யா:

இவ்வளவு கல்வி தான் உனக்கு. அதற்கும் மீறி நீ என்னதான் படித்தாலும் உன்னுடைய தலையில் கல்வி ஏறவே ஏறாது. 10ஆவது வரை தான் என்று விதித்திருந்தால் அவ்வளவு தான். அதையே சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
 

46
கர்மா:

வேலை, தொழில், குணம், மனைவி, மக்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். ஒருவன் இந்த தொழில் தான் செய்வான், இந்த வேலை தான் செய்தான். இதெல்லான், அவனால் விதிக்கப்பட்ட்து. ஒருவன் எப்படி இந்த ஜீவனை காப்பாற்ற வேண்டும் என்று அவனது படைப்பில் எழுதப்பட்ட ஒன்று.

56
மரணம்:

இந்த நாளில் இந்த தருணத்தில் இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு பிராண வியோகம் எழுதப்பட்டிருந்தால் அதனை யாராலும் மாற்ற முடியாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், கல் தடுக்கி கீழே விழுந்து உயிரிழந்தவரும் உண்டு, 100 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பியவரும் உண்டு.

66
சிவன்

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் மும்மூர்த்திகள். பிரம்மா படைப்பவர் என்றால், விஷ்ணு பகவான் காப்பவர். சிவன் அழிப்பவர். இந்த உலகத்தில் படைக்கப்படும் ஒவ்வொரு உயிருக்கும் அவனாலேயே விதி நிர்ணயிக்கப்படுகிறது. பிறக்கும் போது, இவன் இந்த படிப்பு தான் படிப்பான், இந்த வேலை தான் செய்வான், இப்படி தான் மரணம் நிகழும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதைத் தான் ஜாதக கட்டமும் சொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories