இந்த சாபம் நீங்கி இருக்கும் ஒரு பிள்ளை ஆரோக்கியமாக, அடுத்த தலைமுறை தழைக்க சிவன் கோயிலுக்கு பரிகாரம் செய்வார்கள். அதாவது பிச்சை எடுத்து சிவன் கோயிலில் காணிக்கையாக செலுத்துவது தான் அந்த பரிகாரம்.
சிவனே தஞ்சம்..!
தலைமுறைகளாக உங்கள் மீது தொடர்ந்து வரும் சாபம் அல்லது ஜாதக தோஷம் நிவர்த்தி அடைய சிவன் தான் தஞ்சம். நம் கர்ம வினைகள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வது நல்ல பலன் தரும். புராணங்களில் சொல்லப்படும் கதைகளில் கூட தன்னை வருத்தி இறைவனிடம் சரணடையும் நபர்களுக்கு, கடும் தவம் புரிபவர்களுக்கு சிவபெருமான் வேண்டிய வரங்களை கொடுத்ததை நாம் அறிந்திருப்போம். தன்னையே தாழ்த்துபவர்களை சிவபெருமானிடம் உயர்த்துகிறார்.