ஆணவம், பொறாமை, ஆசை, ஆரோக்கியம் ஆகியவை கட்டுக்குள் வர கையில் 5 முடிச்சுகள் போட்டு கயிறு கட்டிக் கொள்ளவேண்டும். இதனால் பயம் நீங்கி, தைரியம் வரும். கர்ம வினைகள் ஒழியும்.
கருப்பு கயிறு கட்டுபவர்கள் அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். ஒவ்வொரு முடிச்சை போட்டுகொள்ளும் போதும் இஷ்ட தெய்வ நாமத்தை சொல்லலாம். இல்லையென்றால், 'ஒம் நமசிவாய' என்றோ 'ஓம் நமோ நாராயணாய' என்றோ உச்சரிக்க வேண்டும்.
விபத்துகளில் தற்காக்கும். பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற தீவினைகளில் இருந்து காத்துக் கொள்ளும். தோஷங்கள் விலகும். நோய்கள் குணமாகும். தீய கனவுகள் ஏற்படாமல் தடுக்கப்படும். பைரவருக்கு கயிறு கட்டிக் கொண்டால் அவருடைய அருள் உங்கள் மீது இருக்கும்.