வெள்ளிக்கிழமை செய்யக் கூடாதவை..!
வெள்ளிக்கிழமை அன்று மருந்து மாத்திரை வாங்குவதை தவிர்த்தல் நலம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை நேர்மறையான சிந்தனைகளை கொண்டிருப்பது தான் நல்லது. வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் உள்ள பெண்கள் அழக்கூடாது என இவர்கள் கூறுவார்கள். ஏனெனில் வெள்ளியன்று அழுவதால் வீட்டில் பணம் தங்காதாம். அன்றையதினம் வீட்டில் அழுகை சத்தம் கேட்பது குடும்பத்திற்கு உகந்தது அல்ல. மருந்து மாத்திரைகளை கூட முந்தைய தினமே வாங்கி வைப்பது நல்லது.
வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் துணி துவைக்கக் கூடாது. அதைப் போல அன்றைய தினம் எந்த பொருளையும் சுத்தம் செய்யக் கூடாது என்பார்கள். அப்படி செய்தால் கடன் சுமை பெருகும். அதைப் போலவே வெள்ளிக்கிழமை ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளித்தாலோ, முடிவெட்டி, சவரம் செய்தாலோ கடன் பிரச்சனை வருமாம்.
இதையும் படிங்க: நம்மை பிடிக்காதவர்கள் வைக்கும் பில்லி சூனியம் போன்ற தீய வினைகளிலிருந்து தப்பிக்க, கோமாதா வழிபாடு..!