திருச்செந்தூர்
சனிக்கிழமை காலை 7 மணி அளவில் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். தரிசனத்திற்கு பின்னர் அனைவரும் திருச்செந்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ளப்படும். திருச்செந்தூர் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டு மதுரையில் தங்க வைக்கப்படுவீர்கள்.
சுற்றுலாவின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மதுரையில் இருந்து புறப்பட்டு அனைவரும் பழமுதிர் சோலைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அனைவரும் சென்னை அழைத்து வரப்படுவீர்கள். இந்த சுற்றுலா பேக்கேஜில் நபர் ஒருவருக்கு ரூ.9000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சஷ்டி விழா கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் அரசின் ஆறுபடை வீடு சுற்றுலா பேக்கேஜில் முன்பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.