சதுர்த்தி அன்று விநாயகரை குளிர செய்ய அஷ்டோத்திரங்களை உச்சரித்து வழிபடலாம். இதை சொல்ல முடியாதவர்கள் விநாயகர் அகவல் பாடல்களைப் பாடி வழிபடலாம். இன்றைய தினம் விநாயகரின் நாமங்களைச் சொல்லி கொண்டே அருகம்புல் அர்ச்சனை செய்வது நல்லது. வினை தீர்க்கும் ஆனைமுகத்தோனுக்கு எளிய நைவேத்தியங்கள் தான் விருப்பம். தனித்தனியாக பிரசாதம் செய்ய முடியாதவர்கள் பொரி, கடலை, வெல்லம் ஆகியவை வைத்து வழிபடலாம்.