பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவை தயாராக வைத்து சிலை அல்லது ராமராக நினைத்துக் கொண்ட 1 ரூபாய்க்கு அபிஷேகம் செய்யுங்கள். பின்பு நாணயத்திற்கு மஞ்சள், குங்குமம் எடுத்து பொட்டு வைக்க வேண்டும். அந்த நாணயத்தை வெற்றிலையின் மீது வைக்க வேண்டும். ஏற்கனவே தயாரித்து வைத்த நெய்வேத்தியங்களை சுவாமி முன் வைத்து தீப தூப ஆராதனை காட்டி பூஜை செய்யுங்கள். அப்போது 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற ராம நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ராம நாமத்தை சொல்வதால் ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
இதையும் படிங்க: ராமநவமி அன்று ராம நாமம் 1 முறை சொன்னால்... இவ்வளவு நன்மைகள் கிடைக்குமாம்..!