பங்குனி உத்திரம் புராணக்கதை
சிவனுடைய மோன நிலையை கலைத்து விட்ட மன்மதன் எரிக்கப்பட்டார். அப்போது தேவர்கள் கலங்கி நின்றனர். அவர்களுக்கு ஆறுதலாக தேவியை இந்த நாளில் தான் சிவன் மணந்து கொண்டார் என்பது புராணம். பங்குனி உத்திர தினத்தில் தான் சிவனுக்கும் பார்வதிக்கும் அலங்காரம் செய்து, மந்திரங்கள் ஒலிக்க திருமணம் நடத்தி, பல்லக்கில் ஊர்வலமாக பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்களாம். இப்படி சிவன் தேவி மண நாள் பங்குனி உத்திரம் என புராணங்கள் சொல்லுகின்றன.
இதையும் படிங்க: eating rules: தினமும் சம்மணம் போட்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இதே நாளில் தான் முருகன்- தெய்வானைக்கும், ராமன் - சீதைக்கும் ரங்கமன்னார் - ஆண்டாளுக்கும் திருமணங்கள் நடந்துள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. தெய்வங்களின் திருமணங்கள் நடந்த அற்புதமான நாள் பங்குனி உத்திரம்.