எல்லோருக்கும் ஒரே மாதிரியான கைரேகைகள் அமைவதில்லை. அதனால் தான் கைகளில் விதி இருப்பதாக ஜோதிடம் சொல்கிறது. நம்முடைய எதிர்காலத்தின் கண்ணாடியாக நம் கைகள் உள்ளன. கைகளில் உள்ள சில ரேகைகள் காதல் வாழ்க்கையைக் குறிக்கின்றன. மற்றவை நம் ஆயுளை குறிக்கின்றன. உள்ளங்கையில் ரேகை மட்டுமல்லாமல், முக்கியமான சில அடையாளங்களும் உள்ளன. இந்த அறிகுறிகள் அனைவருக்கும் கிடைக்காது, ஏனெனில் அந்த அறிகுறி உள்ளவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். உங்கள் கைகளில் இதுபோன்ற அதிர்ஷ்ட அறிகுறிகள் உள்ளதா? என்பதை பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவுக்குள் செல்லும் முன்னர் எந்தெந்த ரேகைகள் எது என்று அறிந்து கொள்வது அவசியம். அந்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். அப்பல்லோ என்றால் சூரிய ரேகை (apollo), சனி ரேகை (saturn line), தலை ரேகை (head line), ஆயுள் ரேகை (life line), விதி ரேகை (fate line), புதன் ரேகை (mercury line), வியாழன் ரேகை (jupiter line).
விதி ரேகை
உங்கள் உள்ளங்கையில் இருந்து நடுவிரலை நோக்கி செல்லும் ரேகை விதி ரேகை என்று அழைக்கப்படுகிறது. உங்கள் கையின் தலை ரேகை, வேறு சில ரேகைகளின் குறுக்குவெட்டு மூலம் உங்கள் கையில் ஒரு முக்கோணம் உருவாவதைக் கண்டால், அது உங்களுக்கு எல்லா தொழில்களிலும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இந்த முக்கோணம் இருப்பவர்கள், எந்த பாதையில் சென்றாலும், புகழ், செழிப்பு அவர்களுடன் இருக்குமாம். .
பதக்க ரேகை (கொடி சின்னம்)
ஒரு நபரின் உள்ளங்கையில், தலை ரேகை, அல்லது ஆயுள் ரேகையில் இருந்து வெளிவரும் நேர்கோட்டினால் உருவாகும் பதக்க ரேகை கொண்டவர்கள் புகழுடையவர்களாக இருப்பார்கள். அது கொடி சின்னம் என்று அழைக்கப்படுகிறது. கையில் இத்தகைய ரேகைகள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த மக்கள் வாழ்க்கையில் மரியாதையுடன் பெரும் தொகையைப் பெறுகிறார்கள். 50 வயதிற்குப் பிறகு, அத்தகையவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும்.
வள்ளல்
உள்ளங்கையில் கேது அல்லது சந்திரனின் மேட்டில் மீன் குறி இருப்பது மிகவும் மங்களகரமானது. இந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வளமானவர்களாகவும், அதிக மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பூஜை, தர்மம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.