Spiritual: உங்களை எல்லாவற்றிலும் வெற்றி பெற வைக்கும் குபேர முத்திரை.! மற்றவர்களை வசியப்படுத்தும் சின்முத்திரை.! எப்படி தெரியுமா?

Published : Nov 13, 2025, 12:08 PM IST

சில சமயங்களில் நாம் சரியாக பேசினாலும், நம் வார்த்தைகள் மற்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது, இதனால் காரியங்கள் தாமதமாகும். இந்த சிக்கலை தீர்க்க, சின்முத்திரை, குபேர முத்திரை போன்ற எளிய ஆன்மீக யுக்திகளைப் பயன்படுத்தி காரியங்களில் வெற்றி காணலாம்.

PREV
15
சரியாக இருந்தாலும் சரியாக நடக்காது

சில நேரங்களில் நம்மால் எவ்வளவு இனிமையாக, புத்திசாலித்தனமாக பேசினாலும், சிலரிடம் நம்முடைய சொற்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நம்முடைய எண்ணம் சரியாக இருந்தாலும், எதிர்ப்பார்த்த நபர் அதை ஏற்கவே மாட்டார். இதுபோன்ற அனுபவம் பலருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும். ஒரு வேலை அவசியம் நடக்க வேண்டும் என்ற சூழலில் இருந்தாலும், அந்த வேலையைச் செய்து தருபவர் ஏதோ காரணங்களால் தாமதம் செய்வார். சில சமயம் அரசு அலுவலகங்களில், வங்கிகளில், அனுமதி அலுவலர்களிடம் கூட இதுபோன்ற சிரமங்கள் நிகழும். சில சமயம் நமது குடும்பத்தினரே நம் பேச்சை கேட்கமாட்டார்கள்.

சரியான ஆவணங்கள் இருந்தாலும் கடன் கிடைக்காமல் போகலாம், கட்டிட அனுமதி தாமதமாகலாம், வணிக அனுமதி காத்திருப்பாக மாறலாம். இப்படி நம் பேச்சு எதிர்பார்த்த பலனை தராமல் போனால், மனம் உடைந்துவிடும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு எளிய ஆன்மீக யுக்தி இருப்பதை பலர் அறியமாட்டார்கள்.

25
வசியம் பெறும் சின்முத்திரை யுக்தி

மற்றவர்களைச் சந்தித்து உங்கள் தேவையைச் சொல்லும் போது, அவர்களின் வலது கண்களை நேராகப் பார்த்தவாறு பேச வேண்டும். அதே நேரத்தில் உங்கள் கையில் சின்முத்திரை வைத்திருப்பது அவசியம். இந்த முத்திரையை உருவாக்குவது எளிது. உங்கள் தலைவிரல் (அங்கூஷ்டம்) மற்றும் சுட்டுவிரலை ஒன்றாக இணைத்து வட்டமாக்கி, மற்ற விரல்களை நேராக நீட்ட வேண்டும். பேசும் நேரத்தில் இந்த முத்திரையை வைத்துக் கொண்டு, உங்கள் இரு கால்களின் பெருவிரல்களையும் தரையில் சிறிது அழுத்தி நிற்க வேண்டும். இதைச் செய்தால், நீங்கள் சொல்வதற்கு எதிரே இருக்கும் நபர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படும்.

முதல் முயற்சியில் விளைவு தெரியவில்லை என்றாலும், இந்த முறையை மீண்டும் மீண்டும் கடைப்பிடித்துப் பாருங்கள். சில நாட்களில் உங்கள் பேச்சின் ஈர்ப்பு சக்தி நிச்சயமாக அதிகரிக்கும்.

35
வெற்றிக்கான குபேர முத்திரை:

பொருளாதார பிரச்சனைகள், வணிக முன்னேற்றம், கடன் அனுமதி போன்ற விஷயங்களில் பேசும்போது, உங்கள் கைகளில் குபேர முத்திரையை வைத்துக் கொண்டு பேசுவது மிகவும் சிறந்தது. இந்த முத்திரை பண ஈர்ப்பையும், செல்வ ஆசியையும் தரும். தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் குபேர முத்திரையுடன் “என் தொழில் வளம் பெருகட்டும்” என்று மனதளவில் தியானம் செய்தால், உங்கள் முயற்சிகளுக்கு வழிகள் திறக்கும்.

45
ஏன் இது செயல்படுகிறது?

அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும், மேல் இடத்தில் இருந்து பேசும் ஒருவர் கீழே இருப்பவரை எளிதில் ஈர்க்க முடியும். அதனால்தான் ஆசிரியர் மேடையில் நின்று கற்பிக்கிறார். மாணவர்கள் தாழ்வான இடத்தில் அமர்ந்திருப்பார்கள். அதேபோல் நம்முடைய பேச்சு தாக்கம் ஏற்பட வேண்டுமென்றால், உடல் நிலையில் சிறிய உயர்வும் நம்பிக்கையும் அவசியம்.

55
உங்கள் பேச்சிலும் முயற்சிகளிலும் மாயத்தன்மையை சேர்க்கும்

இந்த இரண்டு முத்திரைகளும் சின்முத்திரை மற்றும் குபேர முத்திரை உங்கள் பேச்சிலும் முயற்சிகளிலும் மாயத்தன்மையை சேர்க்கும். மற்றவர்களை வசியப்படுத்தி, உங்கள் காரியங்களை வெற்றியடையச் செய்யும் சக்தி இதில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories