Spiritual: திருஷ்டி தோஷங்களை விரட்டும் எளிய பரிகாரங்கள்.! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

Published : Nov 12, 2025, 02:25 PM IST

வீட்டில் ஏற்படும் திருஷ்டி தோஷத்தால் உண்டாகும் மன அமைதி குறைவு, உடல்நல பாதிப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. கல் உப்பு, கற்பூரம் பயன்படுத்துதல் போன்ற பரிகாரங்கள் மூலம் வீட்டில் அமைதியையும் லட்சுமி கடாட்சத்தையும் பெறலாம்.

PREV
14
திருஷ்டி தோஷத்தை போக்கும் எளிய வழிமுறைகள்!

வீட்டில் ஏற்படும் திருஷ்டி பாதிப்புகள் நம்முடைய மன அமைதியையும், உடல் நலனையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும் என்று பெரியோர்கள் கூறுவர். இதனை போக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

24
அருள் செய்யும் கல்உப்பு

வீட்டின் தரையை தண்ணீரால் கழுவும் போது, அந்த நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து பயன்படுத்துவது மிகப் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது வீட்டில் தோஷ சக்திகள் நுழையாமல் தடுக்கும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசை நாளும் கற்பூரம், பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் போன்றவற்றைக் கொண்டு திருஷ்டி சுற்றி வீதியோரத்தில் உடைத்தால், நெகட்டிவ் சக்திகள் விலகும்.

வீட்டில் மூத்தவர்கள் மற்றவர்களுக்குத் திருஷ்டி சுற்றி போடலாம். ஆனால் அந்த பொருட்கள் யாருடைய காலிலும் மிதியாதபடி கவனிக்க வேண்டும். வாரம் ஒருமுறை பூஜையறையில் குங்கிலியம், சாம்பிராணி புகை காட்டி வழிபடுவது தீய சக்திகளை நீக்கும்.  

34
தீபம் ஏற்றி வழிபட வேண்டும்

வீட்டின் முற்றத்தில் அல்லது பால்கனியில் மலர்ச் செடிகள், குறிப்பாக முள் கொண்ட ரோஜா போன்றவை வளர்ப்பது திருஷ்டி சக்தியை போக்கும் என்று நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வேல்மாறல் பாராயணம் படிக்கலாம், இது சக்திவாய்ந்த பாதுகாப்பை அளிக்கும்.

சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு துளசி சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு.இது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்திருப்பது வாஸ்து தோஷம் மற்றும் பகை சக்திகளை விலக்கிடும்.

44
திருஷ்டி தோஷங்களையும் நீங்கும்

வளர்பிறை வெள்ளிக்கிழமைகளில் கற்றாழை அல்லது ஆகாயக் கருடக் கிழங்கை வீட்டின் வாயிலில் கட்டி வைத்தால் நல்ல சக்திகள் நிலைபெறும். காலை, மாலை இருவேளையும் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கடன் பிரச்சினைகளையும் திருஷ்டி தோஷங்களையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த எளிய பரிகாரங்களைச் செய்தால் வீட்டிலும் மனதிலும் அமைதி நிலைத்து, அனைத்து தோஷங்களும் விலகும்.

Read more Photos on
click me!

Recommended Stories