விரதத்தில் கலசம் வைப்பவர்களுக்கு, தண்ணீருடன் எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், தர்ப்பை ஆகியவற்றை வைத்து கலசம் அமைத்து வாழை இலையில் வைக்கலாம். அதன் முன் பச்சரிசி மாவால் சட்கோண கோலம் வரைந்து, நடுவில் “ஓம்” என்றும் அதன் சுற்றிலும் “சரவண பவ” என்றும் எழுத வேண்டும். பிறகு 108 முறை “ஓம் சரவண பவ” என ஜபம் செய்து முருகனை ஆவாஹனம் செய்து வீட்டில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு “ச” என்ற எழுத்தின் மீது ஒரு நெய் விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் சரவண பவ எழுத்துகளின் மீது விளக்கேற்றி ஆறு நாட்கள் வழிபாடு தொடரலாம். நைவேத்யமாக இனிப்பு பொங்கல், பாயசம் போன்றவற்றை சுவாமிக்கு படைக்கலாம்.
கந்த சஷ்டி வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் எந்தகட்டுப்பாடும் கிடையாது என்றும் தூய்மையான மனநிலையில் எப்போதும் முருக பெருமானை நினைத்துக்கொண்டு இருந்தாலே போதும் என்கின்றனர் ஆன்மிக பெருமக்கள்.