அழுகல் சரி தேங்காயிலிருந்து வெளிப்படும் மற்ற அறிகுறியும் ஒவ்வொன்றை உணர்த்தும்.
இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தெய்வத்திற்கு உடைக்கப்படும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் அந்த வீட்டில் விரைவில் சுபகாரியம் நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
தேங்காயில் பூ இருந்தால் என்ன அர்த்தம்…
தெய்வத்திற்கு உடைக்கப்பட்ட தேங்காயில் பூ இருந்தால் அது ஒரு நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மேலும் இதனால் பண வரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்ல விஷயங்கள் போன்றவை நடக்கும் என்பது நம்பிக்கை.
இவையெல்லாம் தாண்டி இறைவனை மனம் உருக வேண்டும் போது இறைவனை சரணடையும் போது நடக்கும் எந்த ஒரு விஷயமும் அபசகுணம் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். பக்தியோடு பூஜை செய்வதை காட்டிலும் நம்பிக்கையோடு கடவுளை சரணடைவது தான் இறைவனுக்கு பிடித்தமானது.