தமிழ்நாட்டில் கொலு வைப்பது பாரம்பரியமாக ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த கொலு மனிதர்களின் வாழ்க்கை தத்துவத்தையும், இயற்கையின் பரிணாமத்தையும், மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைக்கப்படும். குறிப்பாக இதில் ஆதி முதல், இன்று வரை இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வகையான பறவைகள், செடி, மரங்கள், விலங்குகள், என்று ஒவ்வொரு படிகளிலும் அலங்கரிக்கப்படும். பிறகு, மக்களும், சித்தர்களும், தேவர்களும், மேல் படிகளில் அவரவர் உயர்ந்த நிலைக்கேற்ப வைக்கப்படுகின்றனர். இறுதியாக, உயரத்தில் இருக்கும் படியில், கலசமும், கடவுளின் சிலைகளும் வைக்கப்படும். இப்படி கொலு படிக்கட்டுகளில் கூட சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது.