வண்ணங்களுக்கு அர்த்தம்...
சிவப்பு வண்ணம் அன்பு, கருணை, கருவுறுதல் ஆகியவற்றை குறிப்பதாக சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் புதிய ஆரம்பம், மன்னிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை பிரதிபலிப்பது ஆரஞ்சு வண்ணம். மனதில் உள்ள மகிழ்ச்சி, அமைதி, கொண்டாட்டம், அறிவு, கற்றலின் ஈடுபாடு, தியானம் ஆஆகியவற்றை பிரதிபலிப்பாக மஞ்சள் வண்ணம் உள்ளது.
இதையும் படிங்க: தினமும் சுடு தண்ணீர் பருகும் பழக்கம் வைத்து கொண்டால்.. காலையில் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
பிங்க் என்றால் கனிவு, கருணை, நல்லெண்ணங்கள் போதனை ஆகியவை குறித்தும். பச்சை வண்ணம் செழுமையான வாழ்க்கையும், இயற்கையையும், அறுவடையும் உணர்த்துகிறது. நீல வானம் பிற வண்ணங்களை விடவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது இது கிருஷ்ண பரமாத்மாவின் நிறத்தை குறிப்பது இதற்கு முக்கிய காரணம். நீல வண்ணம் ஆன்மீகத்தையும் குறிக்கும். மாயாஜாலம், மந்திரங்களின் ஆற்றல் ஆகியவற்றை உணர்த்துவது பர்பிள் வண்ணம்.