வீட்டில் வழிபட கூடாது என ஏன் சொல்கிறார்கள்?
கடவுள் சிலைகள் எதுவாக இருந்தாலும், அதாவது அந்த சிலை பளிங்கு கல், கருங்கல், ஸ்படிகம், பஞ்சலோகம் இப்படி எதில் செய்யப்பட்ட சிலையாக இருந்தாலும் ஆராதனைகளையும், அபிஷேகளையும் முறையாக செய்ய வேண்டும். ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளுக்கிடையே இறைவனுக்கு தொடர்ந்து இந்த வழிபாடுகளை வீட்டில் செய்ய முடியாது என்ற காரணத்தால் தான், வீடுகளில் கடவுள் சிலைகளை வைத்து வழிபடக் கூடாது என பெரியோர் சொல்கின்றனர்.