பரிகாரம் 3
புது தங்கம் வாங்கினால் அல்லது அடகு வைத்த நகையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தால் உடனே சுத்தமான நீரில் கழுவி கொள்ள வேண்டும். அதை கொண்டு வந்ததும் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான நீரில் கழுவிய பிறகு கொஞ்சம் உப்பு, மஞ்சள் பொடி போட்டு அடுத்து அதை கழுவி கொள்ள வேண்டும். இந்த மாதிரி பரிகாரத்தை வெள்ளியன்று அல்லது பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும். இந்த நகைகளை கழுவிய பிறகு பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். குரு ஹோரை நேரத்தில் பூஜித்து, அந்த நகைகளை சுவாமி திருவுருவப் படத்திற்கு முன்பு வையுங்கள். கொஞ்ச நேரம் பிரார்த்தனை பண்ணிய பிறகு பயன்படுத்துங்கள். இப்படி செய்தால் அடமானத்தில் மீட்ட நகைகள் திரும்ப அடகுக்கு செல்லாமல் நம்மிடம் தங்கும்.
இந்த 3 பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றினை மனதார நம்பி, சுமார் 3 வாரங்கள் அல்லது 6 வாரங்கள் விடாமல் தொடர்ச்சியாக செய்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் தங்கம் தங்கும். கையில் பணம் சேர்ந்து தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கும். வீட்டில் பணப்புழக்கமும் தங்கம் சேர இதை வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள்.
இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தின் முக்கிய விரதம், பண்டிகைகள் குறித்த முழுவிவரம்.. !