வழிபாட்டாளரை ( worshiper) அவமதிப்பது என்பது முனிவர்களையும், துறவிகளையும் அவமதிப்பதாகும் என்று பகவான் விஷ்ணு விளக்குகிறார். இப்படி அவமானம் செய்பவர் பாவம் செய்கிறார். அப்படிப்பட்டவன் வைதரணி நதியில் தண்டிக்கப்படுகிறான். வைதரணி நதி என்றால் கொடிய மிருகங்களும், பிசாசும் வாழும் நதி. இங்கே செல்லும் பாவிகள் ஜந்துக்களால் துன்பம் அனுபவிப்பர். மேலே குறிப்பிட்ட நபர்களை மட்டுமல்ல சக மனிதர்களையும் மதித்து வாழுதல் தான் அறம் கொண்ட வாழ்க்கை. அதையே வாழுங்கள்.
அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் புராணங்கள் அடிப்படையிலும், ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையிலும் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?