கடன் வாங்க கூட நாள், கிழமை, நேரம் எல்லாம் பார்க்கவேண்டும். அஸ்தம் நட்சத்திரம் வரும் நாள்களில் மறந்தும் கடன் வாங்கக் கூடாது. செவ்வாய் அன்று கடன் வாங்கவே கூடாது. ஆனால் அன்றைய தினம் கடன் அடைக்கலாம்.
ராகு காலம், எமகண்டம் மாதிரி குளிகை நேரம் எனவும் ஒன்றுண்டு. மறந்தும் அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். அப்போது வாங்கும் கடன் ஒருநாளும் அடையாது. ஆனால் குளிகை நேரத்தில் திருப்பி கொடுப்பது நல்லது. சீக்கிரம் கடன் அடையும்.