Vadapalani Andavar Temple : சகல தோஷங்களையும் நீக்கும் வட ஆண்டவர் வழிபாடு: திருமணம் நடக்க 6 வார வழிபாடு!

Published : Jan 31, 2026, 06:04 PM IST

Vadapalani Andavar Temple 6 Weeks Worship for Marriage Remedy : அறுபடை வீடுகளுக்கு இணையான சிறப்பைப் பெற்ற தலம் வடபழநி ஆண்டவர் கோயிலில் தொடர்ந்து 6 வாரம் வழிபாடு செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

PREV
15
செவ்வாய் தோஷ பரிகாரம் வடபழநி, Chevvai Dosham Remedies Vadapalani

Vadapalani Andavar Temple 6 Weeks Worship for Marriage Remedy : சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் கோயிலானது அறுபடை வீடுகளுக்கும் இணையான ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது. அப்படி என்ன சிறப்பு இந்த கோயிலில் இருக்கிறது? ஏன் இந்தளவிற்கு ஃபேமஸ் ஆக என்ன காரணம் என்பது பற்றி பார்க்கலாம். 1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் தீவிர முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார்.

ஸ்ரீ ஜலநாராயணன் சுவாமி வரலாறு – 44 சன்னதி கொண்ட கோயில்!

25
திருமணப் பரிகாரத் தலம் வடபழநி, Vadapalani Marriage Pariharam Temple

ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபட்டார். தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார் இதற்கு "பாவாடம்" என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத்தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய “அருள்வாக்கு” பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.1920ல் இந்த கோயில் ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோயில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

தீராத குடும்ப கஷ்டங்கள் தீர வேண்டுமா? காஞ்சி காமாட்சி அம்மன் அருளும் எளிய பரிகாரங்கள்!

35
வடபழநி முருகன் வரலாறு, Vadapalani Murugan History in Tamil

மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் அதாவது செருப்புடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன.

குழந்தை பாக்கியம் கிடைக்க, குடும்பத்தில் நிம்மதி உண்டாக வழிபட வேண்டிய கோயில்!

45
சென்னை வடபழநி முருகன் கோயில், Chennai Vadapalani Murugan Temple

நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக இக்கோயிலுக்கு 6 வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வந்தால் விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்தில் தடை இருப்பவர்களுக்கு எனக்கு திருமணம் நடைபெற்றால் இந்த கோயிலில் தான் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டால் அது விரைவில் நடக்கும் என்றும் அவர்கள் சொன்னபடியே திருமணத்தைக் கோயிலில் நடத்தி வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இங்கு வந்து வேண்டிக்கொண்டு அதன் காணிக்கையாக முட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது அது மட்டுமல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி கூட இங்கு வைத்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

55
வடபழநி ஆண்டவர் கோயில், Vadapalani Andavar Temple

வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி மற்றும் சித்திரை ஒன்றாம் தேதியும் கோயிலில் சிறப்பான விழாக்களாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories