பணம் தரும் ஏலக்காய் வழிபாடு! தெரியுமா உங்களுக்கு.

First Published Mar 7, 2023, 12:15 PM IST

மஹாலக்ஷ்மியின் அனுகிரஹம் பெற மிகச் சுலபமான ஏலக்காய் வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும். எப்படி அந்த வழிபாட்டினை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
 

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள்,பெண்கள் என்று அனவைரும் ஓடி ஓடி உழைப்பது அனைத்தும் நாலு காசு சேர்க்கத் தான். ஓடி ஓடி உழைத்து சம்பாதிக்கப்படும் பணம் கடினமான காரியமெனில் அதைவிட சம்பாதித்த பணத்தை சேர்க்கவும், சேர்த்து வைத்துள்ள பணத்தை நிலைக்க வைப்பது தான் பெரிதும் கடினம்.

ஒரு புறம் பணம் வந்தாலும் மறுபக்கம் அது நிலைக்காமல் அனாவசியமாக பல்வேறு வழிகளில் கரைந்து கொண்டே இருக்கும். சிலருக்கு தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுதல்,சிலருக்கு வாகனங்கள் பழுதடைதல், என்று தீடீர் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இப்படி தொடர்ந்து ஏற்பட்டால், அந்த வீட்டில் மஹாலக்ஷ்மியின் அனுகிரஹம் இல்லை என்பதை உணர்த்தும். மஹாலக்ஷ்மியின் அனுகிரஹம் பெற மிகச் சுலபமான ஏலக்காய் வழிபாடு செய்தால் வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும். எப்படி அந்த வழிபாட்டினை செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வழிபாட்டினை தொடர்ந்து செய்து வர சம்பாதித்த பணத்தை சந்தோசமாக செலவு செய்து, தேவைக்கு சேமித்து வைத்துக் கொள்ள உதவும். இந்த வழிபாட்டை வடமாநிலத்தவர்கள் இன்றும் பின்பற்றி வருகிறார்கள். மேலும் இது மிக ஒரு சுலபமான வழிபாடு ஆகும். பெரிய அளவில் செலவுகள் எதுவும் செய்யாமல் வெறும் இரண்டு ஏலக்காய்களைக் கொண்டு இந்த வழிபாட்டினை செய்யலாம்.

இந்த வழிபாட்டினை எந்த கிழமையிலும் எந்த நேரத்திலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கதுஎனினும் குறிப்பாக வெள்ளிக்கிழமை காலைமணியளவில் செய்தல் மிகச் சிறப்புவீட்டில் உள்ளப் பெண்கள் அல்லது குழந்தைகளின் கைகளால் இந்த வழிபாடு செய்யலாம்.

அதிகாலை எழுந்து சுத்தமாக நீராடி விட்டு பின் பூஜை அறையில் உள்ள ஸ்வாமி படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து , பின் விளக்கேற்றி ,தீப தூபங்கள் காட்ட வேண்டும். 2 பச்சை ஏலக்காய்களை எடுத்துக் கொண்டு நிலை வாசற்படிக்கு அருகில் சென்று நிலை வாசலின் இரண்டு பக்கங்களிமும் 2 தீபங்கள் ஏற்றி வைத்து விட வேண்டும். பின் விளக்குகளின் அருகே உட்கார்ந்து 2 ஏலக்காய்களை கையில் வைத்து, குல தெய்வம், மஹாலக்ஷ்மி, கிரக லட்சுமி ஆகியோரை நினைத்துக் கொண்டு மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் வந்து அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கையில் உள்ள ஏலக்காய்களை அப்படியே கொண்டு வந்து பூஜை அறையில் ஒரு சிவப்பு நிறத் துணியில் வைத்து முடிச்சு போட்டு, இதனை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்

அவ்வளவு தான். நிலை வாசலில் இருக்கும் தெய்வங்களை இந்த 2 ஏழைக்காய் மூலமாக வசப்படுத்தி நம் வீட்டின் பணப்பெட்டியில் வைத்துள்ளோம்இன்றளவும் வடமாநிலத்தவர்கள் பணம், நகைகளை வசியம் செய்ய ஏலக்காய்களை பயன்படுத்தி வருகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்துருக்கும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் மகாலட்சுமி வசிய பூஜைக்கு செய்யும் நிவேதனத்தில் ஏலக்காய்களை அதிகமாக சேர்த்து செய்வார்கள். நறுமணம் உள்ள தெய்வ கடாட்சம் பெற்ற இந்த ஏலக்காய்க்கு நல்ல சக்தியையும் மேலும் செல்வ வளத்தை வசியம் செய்கின்ற தன்மையும் அதிகமாக கொண்டுள்ளது.

மிக எளிய பரிகாரமான இந்த 2 ஏலக்காய் பரிகாரத்தை மஹாலக்ஷ்மியை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து பணப் பெட்டி அல்லது பணப்பையில் வைத்து உங்கள் வாழ்வில் நடக்கும் ஏற்றத்தை உணருங்கள். நீங்களும் முழு மனதாக நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்

click me!