கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

First Published Mar 11, 2023, 11:28 AM IST

நவக் கிரகங்களை சுற்றும் போது கடைசி 2 சுற்றுகளை அனைவரும் இடப்புறமாக சுற்றலாமா ? யார் யார் அப்படி சுற்ற வேண்டும்? யார் எல்லாம் சுற்றக் கூடாது என்பதனை இந்த பகுதியில் காணலாம் .

பொதுவாக கோவிலில் நாம் வலம் வரக்கூடியதை பிரதட்சணம் என்று கூறுவோம். ஒரு கோவிலில் பிரதட்சணமாகத் தான் வலம் வர வேண்டும். அப்பிரதட்சணமாக அதாவது இடப்புறமாக அல்லது எதிர்புறமாக வலம் வரக் கூடாது இப்படி தான் நமது மூதாதையர் கூறியுள்ளனர்.

சோம சூத்திர பிரதட்சணம் :

சிவன் கோயிலில் பிரதோஷத்தின் போது மட்டும் அப்பிரதட்சணமாக அதாவது இடப்புறமாக (எதிர் திசையில்) வலம் வரலாம். அதற்கு சோம சூத்திர பிரதட்சணம் என்ற பெயர் உண்டு. மற்ற படி கோவில்களில் எதிர் திசையில் வலம் வருவது கூடவே கூடாது.

நவக்கிரங்களில் 9 கிரகங்கள் உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. நவக்கிரங்களை நாம் வழிபாடு செய்யும் போது ஒரு கிரகத்திற்குஓரு சுற்று வீதம் 9 கிரங்களுக்கு 9 சுற்றுகள் சுற்றுகிறோம்.

அப்படி 9 சுற்றுகள் சுற்றும் போது சிலர் 7 சுற்றுகளை வலது புறமாகவும், கடைசி 2 சுற்றுகளை இடப்புறமாகவும் சுற்றுவதை பார்த்து இருப்போம். இப்படி அனைவரும் கடைசி 2 சுற்றுகளை இடப்புறமாக சுற்றலாமா ? யார் யார் அப்படி சுற்ற வேண்டும்? யார் எல்லாம் சுற்றக் கூடாது என்பதனை இந்த பகுதியில் காணலாம்

ஆனால் நம்மில் பலருக்கும் ஒரு பெரிய சந்தேகம் உண்டு சனிக் கிழமைகளில் நவக்கிரக வழிபாட்டின் போது பலரும் 7 சுற்றுகளை வலப்புறமாகவும் , ராகு கேதுவிற்கான கடைசி 2 சுற்றுகளை இடப்புறமாகவும் சுற்றுவதை பார்த்து இருப்போம். இப்படி இடப்புறமாக யார் சுற்றலாம் ,யார் சுற்றக் கூடாது?

நவகிரகங்களில் 7 கிரகங்கள் நேராக சுற்றும். ராகு கேது மட்டும் எதிராக சுற்றும் . மேலும் இவ்விரு கிரகங்களும் நகரும் போதும் அவை பின்னோக்கி தான் நகருகிறது . ஆகையால் ராகு,கேதுவிற்கான சுற்றுகளை பின்னோக்கி சுற்றினால் தான் முழுப்பலனும் கிடைக்கும் என்று பலர் சொல்லி பார்த்து இருப்போம். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ராகுவையும்,கேதுவையும் நவக்கிரகங்களோடு இனைத்த பிறகு, நவக்கிரங்ககளுக்கு சுற்றுகின்ற முறை என்பது 9ஆக கணக்கிடப்பட்டு ஒரே முறையில் தான் நாம் சுற்ற வேண்டும். இதுவே முறையாகும் .

யார்  அப்பிரதட்சணம் (எதிர்புறமாக ) சுற்ற வேண்டும். ?

பரிகாரத்திற்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் ஜோதிடர்களால் கூறப்பட்டு ராகு,கேது சாந்தி பூஜையை மேற்கொள்ளும் போது சிலர் அப்பிரதட்சணம் அதாவது எதிர்புறமாக சுற்றுவார்கள் . அவர்கள் சுற்றுகிறார்கள் என்று ஒரு சிலர் தாங்களும் இடப்புறமாக சுற்றத் தொடங்குவார்கள். இந்த தவறை ஒரு போதும் செய்து விட வேண்டாம்.

சர்ப்ப தோஷம் : தடைகளை தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த மந்திரம்!

வழிபாடு என்பது வழிபாடாக இருக்கும் போது அது ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஆனால் தோஷங்கள் சில நிவர்த்தி ஆக வேண்டும் என்று பரிகாரங்களாக சிலர் செய்கின்ற போது, அந்த பரிகாரங்களை பார்த்து நாமும் அதே போன்று செய்வது வழிபாடாகாது.

அதனால் பொதுவாக நவக்கிரங்களை ராகுவையும்,கேதுவையும் அப்பிரதட்சணமாக (இடப்புறமாக, எதிர் புறமாக, தலைகீழாக )சுற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது .நவக்கிரங்களை வழிபடும் போதே நமது பாவங்கள் தொலைத்து விடுகிறது. அதன் பின் நாம் எதிர்புறமாக சுற்றினால் தான் பாவம் போகும் அப்படி என்று எதுவும் கிடையாது.

நம்பிக்கையோடு,உறுதியோடு நாம் வழிபாடு செய்தாலே நிச்சயமாக அந்த வழிபாட்டை கிரகங்கள் ஏற்றுக் கொண்டு நமக்கு அனுக்கிரஹம் கிடைக்கும்

click me!