நல்லதொரு வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவர். வேலையில்லாத மனிதர்களை இந்த உலகம் மதிப்பதும் இல்லை.. ஏன் குடும்பம் கூட ஏற்றுக் கொள்வதில்லை. அது மட்டும் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஆண்களை சமூகம் இழிவாக பார்க்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. அதாவது ரூபாய் 20 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் கூட குறைந்த சம்பளம் வாங்குவதாக கேவலமாக நடத்தப்படுகிறார்கள். பெண் வீட்டார் இதுமாதிரி சம்பளத்தை மதிக்கவே இல்லை என, சமூக வலைதளங்களில் புலம்பாத ஆண்கள் வெகு குறைவு.