நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் சனி தோஷம் விலகும் என்று நம்பப்படுகிறது. சனியினால் ஏற்படும் வாதம், முடக்கம், எலும்பு நோய்கள் நீங்கும். புதனால் ஏற்படும் தோல் சம்மந்தப்பட்ட நோய்களும் விலகுமாம். சூரியன், செவ்வாயால் ஏற்படும் உஷ்ணம் நீங்கும், முடி கொட்டுவது நின்று, முடி வளரத்தொடங்கும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்வது நல்லது.