Korean Glass Skin : அரிசி மாவை இப்படி யூஸ் பண்ணுங்க; உங்களுக்கும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கிடைக்கும்!!

First Published Jun 12, 2024, 12:46 PM IST

அரிசி மாவு சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. எனவே, எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். 
 

Skin tips

இயற்கை நமக்கு தந்த ஒரு வரப் பிரசாதம் அரிசி. ஆம், அரிசியை உணவாக மட்டுமில்லாமல், அழகுகிற்கும் பயன்படுத்தலாம் தெரியுமா? பெரும்பாலானோர் அழகை பராமரிக்க இயற்கை வழியை பின்பற்றுகின்றனர். அதுதான் சருமத்திற்கும் அலர்ஜியை ஏற்படுத்தாமல் இருக்கும்.

Rice water tips

அரிசி கழுவிய நீரின் நன்மைகள் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோலவே, அரிசி மாவும் சருமத்தில் அற்புத ஆச்சரியங்களை ஏற்படுத்தும். எனவே, எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு அரிசி மாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். 

Latest Videos


Rice Flour Face Mask

அரிசி மாவில் ஃபேஸ் பேக்: 3 ஸ்பூன் அரிசி மாவு, தயிர், காய்ச்சாத பால் ஆகியவற்றை நன்கு கலந்து, அந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, லேசாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.  

நன்மைகள்: முகத்தில் இருந்து இறந்த செல்கள் வெளியேற்றப்படும், அழுக்குகள் நீங்கும், முகத்தின் மங்கிய நிறம் மாறும். இந்த நன்மைகளைப் பெற இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம். 

Summer tips with Rice flour

கோடைகால சரும் பிரச்சனைகளுக்கு நல்லது: கோடை காலத்தில் வரும் வியர்க்குரு, அரிப்பு, தடிப்பு, உஷ்ண கட்டிகள் போன்றவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். இதை தடுக்க அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதை ஐஸ்க்யூப்களில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும். அவை ஐஸ் கட்டியான பிறகு அதை உங்கள் சருமத்தில் அரிப்பு இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் வரை செய்து வந்தால் கோடை கால சரும பிரச்சனைகள் நீங்கும்.

இதையும் படிங்க:  கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக ஜொலிக்க உருளைக்கிழங்கை இப்படி யூஸ் பண்ணுங்க..!

Dark Spots on the face

கரும்புள்ளிகளை நீக்கும்: அரிசி மாவு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. இதற்கு அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக மாறும். இதனை நீங்கள் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் மூக்கை சுற்றி இருக்கும் கரும்புள்ளிகள். முகத்தில் பருக்களால் வந்த கறைகள் ஆகியவை மறையும்.

இதையும் படிங்க:  முகம் தங்கம் போல மினுமினுங்க  அன்னாசி பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

stretch marks

ஸ்ட்ரெச் மார்க்: பிரசவத்தினால் ஏற்பட்ட தழும்பு, அதிகரித்த எடையை குறைக்கும் போது உண்டாகும் தழும்பு போன்ற தழும்புகளை விரட்டி அடிக்க அரிசி மாவு உதவும். இதற்கு அரிசி மாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் ஆகியவற்றை நன்கு கலக்கி, அந்த பேஸ்ட்டை தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதை நீங்கள் தினமும் குளிக்கும் முன்பு தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மறையும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!