சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நாளே அமாவாசை ஆகும். சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்து விடுபட்டு வளர்பிறை நிலைக்கு செல்லும் நாள். இந்த நாளில் தான், தன்னுடைய சொந்த வீடான கடக ராசியில் சந்திரனும், சூரியனும் இணைகிறார்கள். எனவே, இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
இந்த ஐப்பசி மாத அமாவாசை திதி, இந்திய நேரப்படி, அக்டோபர் 24 ஆம் தேதி சரியாக மாலை 5.27 மணிக்கு தொடங்கி அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:18 மணி வரை நீடிக்கின்றது.