வீட்டில் இந்த ஒரு பொருள் வைத்திருந்தால்..வறுமை விலகும், அதிர்ஷ்டம் தரும்..வியக்க வைக்கும் வாஸ்து குறிப்புகள்.!

First Published Oct 16, 2022, 9:44 AM IST

Athirstam tharum vastu aamai tamil: நம்முடைய வீட்டில் அதிர்ஷ்ட யோகங்கள் வருவதற்கு, நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன வாஸ்து குறிப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம். 

ஆன்மீக ரீதியாக  ஒரு சில பொருட்கள் துரதிஷ்டத்திற்கு அடையாளமாக கூறப்படுவதும் உண்டு. அதேபோன்று, வாஸ்து ரீதியாக சில பொருட்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. எனவே,நம்முடைய வீட்டில் அதிர்ஷ்ட யோகங்கள் வருவதற்கு, நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன வாஸ்து குறிப்புகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம். அவை என்னென்னெ பொருட்கள் என்பதை பார்ப்போம். 

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..ரிஷபம் ராசிக்கு பெருமை, கன்னி ராசிக்கு செல்வம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டம் தரக்கூடிய சில பொருட்களை வாங்கி சரியான திசையில் வைப்பது, இல்லத்தில் நேர்மறை ஆற்றல் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. மேலும், இதன் மூலம் குடும்பத்தில் வறுமை நீங்கி, துரதிர்ஷ்டங்கள் எல்லாம் மறைந்து, அதிர்ஷ்டங்கள் வரும் என்பது பெரும்பாலானோர் நம்பிக்கை ஆகும். அவை என்ன பொருள் என்பதை பார்ப்போம்.

 வாஸ்து ரீதியான அதிர்ஷ்ட பொருட்களில் ஒன்று ‘ஆமை சிலை’ ஆகும்.  ஆன்மீகத்தின் படி ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்று பழமொழி கூறப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆமை வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆமை இருக்கும் இல்லம் நிச்சயம் உருபடும். அதிலும், உலோகம், ஸ்படிகம், மரம், கல் போன்றவற்றால் உருவாகக்கூடிய ஆமை ரொம்பவும் விசேஷமானது. இதனை உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் வைத்திருக்கும் போது, வறுமை விலகி, செல்வம் பெருகுமாம். 


அதுபோல, வாஸ்து ரீதியாக அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய மற்றுமொரு பொருள் நீர் ஸ்தலம். பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கும் இந்த நீர் ஸ்தலம் நமக்கு பாசிட்டிவ் வைப்ரேஷனை ஏற்படுத்துகிறது. பெரிய பெரிய ஹோட்டல்கள் அல்லது மாளிகைகளில் நீரூற்றுகள் வைக்கப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். இந்த நீரூற்றுகள் இருக்கும் இடங்களில் எல்லாம் செல்வமும், நேர்மறை ஓட்டமும் காணப்படும். இங்கு தன வரவிற்கு பஞ்சமே இருக்காது.

இந்த செயற்கை நீரூற்றுகள் மலிவான விலைகளிலும் இப்போது பல இடங்களில் காணப்படுகிறது. இந்த நீரூற்றுகளை வடக்கு திசையில் அல்லது வடகிழக்கு மற்றும் கிழக்கு போன்ற திசைகளில் அமைக்கப்பட வேண்டும். இது வாஸ்து ரீதியாக யோகத்தை கொடுக்கும், வாஸ்து தோஷங்களையும் போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் வாசலுக்கு நேரே நீரூற்றுகள் அமைக்கப்படலாம். இது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும்.

மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..ரிஷபம் ராசிக்கு பெருமை, கன்னி ராசிக்கு செல்வம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

click me!