கேட்டவரம் அள்ளித்தரும் ஆஞ்சநேயர் அருள் கிடைக்க..நாளை சனிக்கிழமை இந்த ஒரு வழிபாடு மட்டும் செய்து பாருங்கள்..!

First Published Oct 14, 2022, 9:47 AM IST

Hanuman Pooja Tamil: பொதுவாகவே சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு செய்வதற்கும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதற்கும் உகந்த நாட்கள் என்கிறார்கள். காலையும். மாலையும் ஆஞ்சநேயர் மற்றும் பெருமாளை வணங்கி வழிபடலாம். இதனால் நீங்கள் சனி கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். 

இந்த புரட்டாசி 4-வது சனிக்கிழமை, ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். குறிப்பாக, வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கேட்டவருக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் தெய்வம் ஆஞ்சநேயர். இவரை நாம் மனதார வேண்டிக் கொண்டு, வால் வழிபாடு செய்தால் நம் மனதில் நினைத்த காரியங்களை நிச்சயம் நமக்கு நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

வாழ் வழிபாடு செய்வதற்கு, சனிக்கிழமை மிகவும் உகந்த நாள். ஏனென்றால் ராமர் அதாவது பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் அவருடைய பக்தனான இவருக்கும் அதே நாளில் இந்த பூஜையை தொடங்குவது மிகவும் உத்தமம். இந்த வால் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பற்றி இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

 இந்த வழிபாடு செய்வதற்கு சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நம் வீட்டில் பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் நல்லது. மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.

அதன் பிறகு, அனுமரின் வால் பகுதி தொடங்கும் இடத்தில் சந்தனம் வைத்து அதன் மேல் குங்குமமும் வைக்க வேண்டும். அதை வைக்கும் போது கட்டாயமாக ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு சந்தன பொட்டு மட்டுமே வைக்க வேண்டும். இது போல தொடர்ந்து நாற்பத்தியெட்டு நாட்கள் வைக்க வேண்டும். சனிக்கிழமை தொடங்கி முதல் நாற்பத்தியெட்டு நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாடு செய்து வர வேண்டும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

அதேபோன்று, இந்த சனிக்கிழமை அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.  

தென்னிந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்பி உண்பார்கள். ஆதலால், எளிதில் கிடைக்கும் உப்புடன், காரமும் இயற்கையாகச் சேர்ந்துவிட்டது வடையுடன். ஆதலால் இங்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலை ஆஞ்சநேயருக்குப் படைக்கப்படுகிறது.

வெற்றிலை மாலை சார்த்தி வழிபாடு செய்தால், திருமணத்தடை நீங்கும். சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்திவழிபடுவது, நீண்ட நாள் தடைகள் விலகும். குடும்பப் பிரச்சினைகள் சரியாகும் என்பது நம்பிக்கை.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..துலாம் ராசிக்கு நேர்மை! தனுசு ராசிக்கு ஆன்மீகம் நல்லது, உங்கள் ராசிக்கு என்ன பலன்

click me!