இந்த வழிபாடு செய்வதற்கு சனிக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தமாக நம் வீட்டில் பூஜை அறையில் ஆஞ்சநேயர் படத்தை நன்றாக சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அவரின் படத்திற்கு துளசி மாலை அணிவித்தால் நல்லது. மாலை அணிவித்த பிறகு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.