இந்த 5 பொருட்கள் வீட்டில் குறையத் தொடங்கினால், உங்களுக்கு தீராத பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்!

First Published Mar 6, 2023, 11:33 AM IST

சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவு செய்கிறோம்,எப்படி சேமித்து வைக்கிறோம் என்பதையும் விட ,வீட்டில் இருக்கும் பணத்தை குறையாமல்,எப்போதும் நிறைவாக எப்படி வைத்துக் கொள்ளுவது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.​​​​​​

நம்முடைய வீட்டில் பணக்கஷ்டம் வரக்கூடாது என்றால் இந்த 5 விஷயங்களை நிறைவாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்தப் பொருட்கள் நம் வீட்டில் இல்லை என்ற வார்த்தை வரவேக் கூடாது. இதை எத்தனைபேர் நம்புவீர்கள் என்று தெரிய வில்லை . நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றி பாருங்கள். சில பேரின் வாழ்க்கையில் பின் சொல்லக் கூடிய விஷயங்களை அனுபப்பூர்வமாக உணர்ந்தவர்களும் இருப்பார்கள். சரி இப்போது அது என்னென்ன பொருட்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 

உப்பு:

முதலில் ஒருவரது வீட்டில் எதிர்பாராமல் கூட உப்பு முழுமையாகசுத்தமாக தீர்ந்து போகக் கூடாது. அப்படி நீங்கள் தெரியாமல் உப்பு வாங்க மறந்து விட்டால்,அது உங்களுக்கு ஏதோ ஒரு பணப் பிரச்னையை கொண்டு வந்து சேர்க்கப் போகிறது என்று அர்த்தம். வீட்டில் இருக்கும் பெண்கள் கவனமாக ஒரு உப்பு பாக்கெட்டை முன்க்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லதாகும்.

மஞ்சள்,குங்குமம்:

நெற்றியில் வைத்து  கொள்ளக் கூடிய மஞ்சள்,குங்குமானது, ஒரு போதும் சுத்தமாக காலி ஆகக் கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டில் சுமங்கலி பெண்கள் வருகிறார்கள். அவர்களுக்கு குங்குமம் கொடுக்க சொல்லுகையில், வீட்டில் இருக்கும் பெண், குங்குமம் இல்லை என்ற வார்த்தையை பயன் படுத்தவே கூடாது. இதுவும் உங்களுக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு அறிகுறி.ஆகையால் மஞ்சள்,குங்குமம் எப்போதும் காலி ஆவதற்கு முன்பே மற்றொன்றே வாங்கி வைத்துக் கொள்ளுதல் நன்றாகும்

 

சனியிடம் இருந்து விடுவிக்கும் நீலக்கல்... இந்த 4 ராசியினர் அதை அணிந்தால் செம்ம அதிர்ஷ்டம் கிடைக்குமாம்..

அரிசி:

என்றைக்குமே அரிசி நமது வீட்டில் நிறைந்து காணப்பட வேண்டும். நாளைக்கு உலையில் போட அரிசி இல்லை என்ற வார்த்தை வரவே கூடாது. உப்புமஞ்சள்,குங்குமம்,அரிசி இந்த நான்குப் பொருட்களும் எப்போதும் நிறைந்தே இருக்க வேண்டும்

பெண்களின் சந்தோஷம் :

பெண்களின் சந்தோஷம் குறைந்தால் கூட அந்த வீட்டிற்கு கஷ்டம் வரும். வீட்டில் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். எந்த வீட்டில் ஒரு பெண் கஷ்டபட்டுக் கொண்டு இருக்கிறாளோ அந்த வீட்டில் என்ன தான் காசு,பணம்,தங்கம்,வைரம் இருந்தாலும் அந்த வீட்டில் சந்தோஷம் இருக்காது. பணம் இருந்தாலும் பயன் இல்லாமல் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்ணை நிறைவோடு பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் சந்தோஷமும் செல்வக் கடாட்சமும் நிலையாக நிலைத்து நிற்கும் என்பதும் சாஸ்திர ரீதியாக நமக்கு சொல்லப்பட்டுள்ள குறிப்பு.

click me!