14 இயக்குனர்கள் இணைந்து ஒரே நாளில் எடுத்து முடித்து... கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் பற்றி தெரியுமா?

Published : Jun 13, 2024, 01:18 PM ISTUpdated : Jun 13, 2024, 01:24 PM IST

இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் எடுத்து முடிக்க வருடக்கணக்கில் ஆகும் நிலையில், தமிழ் சினிமாவில் ஒரே நாளில் எடுத்து முடிக்கப்பட்ட படம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
14 இயக்குனர்கள் இணைந்து ஒரே நாளில் எடுத்து முடித்து... கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம் பற்றி தெரியுமா?
suyamvaram

சினிமா தற்போது பல்வேறு வளர்ச்சியை கண்டுவிட்டாலும் இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து பின்னணி பணிகள் உள்பட ஒட்டுமொத்த பணிகளையும் நிறைவு செய்ய கிட்டத்தட்டா ஆறு மாதமாவது ஆகிவிடும். அப்படி இருக்கையில் 1999ம் ஆண்டே தமிழில் ஒரு படம் ஒரே நாளில் எடுத்து முடிக்கப்பட்டு, அதன் இசையமைப்பு, படத்தொகுப்பு என அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. அந்த படத்தின் பெயர் தான் ‘சுயம் வரம்’.

24
suyamvaram movie

இந்தியாவிலேயே ஒரே நாளில் படமாக்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு முழு பணிகளும் நிறைவு செய்யப்பட்ட முதல் திரைப்படம் சுயம் வரம் தான். குறித்த நேரத்தில் ஷூட்டிங்கை முடிக்க முடியாமல் பல இயக்குனர்கள் திண்டாடிய கதையை கேட்டிருப்போம், ஆனால் 14 திறமைவாய்ந்த இயக்குனர்கள் இணைந்து ஐந்து திருமண காட்சிகள், பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகளுடன் கூடிய ஒரு முழுநீள படத்தை ஒரே நாளில் எடுத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... Rashmika Mandanna : பெங்களூருவில் ரூ.8 கோடியில் பங்களா.. மும்பையில் ஆடம்பர வீடு.. ராஜ வாழ்க்கை வாழும் நடிகை..

34
Tamil Movie suyamvaram

அதிக நட்சத்திரங்களை வைத்து அதிவேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது சுயம்வரம் திரைப்படம். 14 இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள், 4 இசையமைப்பாளர்கள், 25 அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என இத்தனை பேரின் கூட்டு முயற்சியால் தான் தமிழ் சினிமா இத்தகைய மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.

சுயம்வரம் படத்தை சுந்தர் சி, கே.எஸ்.ரவிக்குமார், பி வாசு, செல்வா, சுந்தர்ராஜன் உள்பட 14 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். மேலும் இதில் அப்பாஸ், அர்ஜுன், பிரபுதேவா, பிரபு, கார்த்திக், சத்யராஜ், பாக்கியராஜ், ஊர்வசி, ரம்பா, விஜயகுமார், நெப்போலியன், பார்த்திபன், பாண்டியராஜன், சுவலட்சுமி உள்பட 25க்கும் மேற்பட்ட பிரபலங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

44
suyamvaram Movie Guinness Record

இந்த படத்தின் கதை என்னவென்றால், 60வயது முதியவரான விஜயகுமார் 60வது பிறந்தநாளை கொண்டாடும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அப்போது தனது 9 மகன்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய கடைசி ஆசையை சொல்கிறார். அவர் உயிருடன் இருக்கும்போதே திருமணம் செய்துவிட வேண்டும் என முடிவெடுத்து அந்த 9 பசங்களுக்கும் மணப்பெண்ணை தேடுகின்றனர். அவர்களுக்கு பெண் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் சாதனையை இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கமல்ஹாசனின் தக் லைஃப் படப்பிடிப்பில் திடீர் விபத்து! பிரபல நடிகரின் கால் எலும்பு முறிந்தால் பரபரப்பு!

Read more Photos on
click me!

Recommended Stories