இதனையடுத்து புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்தார். அதில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்றார். மேலும் விளை நிலத்தில் பயிர்கள் சேதமடைந்ததால் ஹெக்டேருக்கு ரூ. 10,000, சேதம் அடைந்த கூரை வீடு ஒன்றுக்கு ரூ.10,000, பலியான மாட்டிற்கு ரூ.40,000, கன்றுக் குட்டிக்கு ரூ.20,000, சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.