ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவாகிய இறைவன், உலகில் உள்ள உயிர்கள் இன்புற்று வாழ சிவலிங்கத் திருமேனியாக தோன்றிய நன்னாள் தான் மகா சிவராத்திரியாகும். பல்வேறு இடங்களில் பல்லாயிரம் பெயர்களைக் கொண்டு இறைவன் சிவலிங்கத் திருமேனியாக அருள்புரிகின்றான்.