‘‘பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 போட்டது போல, தமிழ்நாட்டிலும் ரூ.15,000 போடக்கூட வாய்ப்புள்ளது’’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நம் அம்மாக்களிடம் வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க சொல்லவேண்டும் - சீமான்
இதுகுறித்து பேசிய சீமான், ‘‘ஆட்சிக்கு வந்தால் 3.5 லட்சம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்த திமுக, அதிகாரத்தை அடைந்த பிறகு அதனை நிறைவேற்ற மறுப்பது ஆட்சியில் அமர்த்திய தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு செய்கின்ற பச்சைத்துரோகம்.
நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் எத்தனை அதிகாரிகள் அடி வாங்கிவிட்டு ஓடப்போகிறார்களோ தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் நாட்களில் நீங்கள் பாருங்கள் எவனாவது இந்த ஃபார்ம் என்று சொல்லி ஓடப்போகிறார்கள். எங்கள் ஆட்கள் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்கள். அப்புறம் அதுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. கவனமாக இருங்கள். எனக்கு தெரியவில்லை. எனக்கு குழப்பமாக இருக்கிறது. காலையில் இருந்து என்ன செய்வது என்று தெரியவில்லை.