தயங்கும் விஜய்..! நெருங்கும் பாஜக..! அமித் ஷாவின் அதிரடி மூவ்..! பற்றி எரியும் அரசியல் களம்..!

Published : Sep 29, 2025, 03:22 PM IST

திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தவெகவை இணைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால், விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார்.

PREV
14

ஆடிட்டர் குருமூர்த்தியை தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த விஜய்க்கு நெருக்கமான நபர்கள் நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளது அரசியல் ஆர்வலர்களின் புருவத்தை உயர்த்தி உள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. ஒருபுறம் இப்படி கண்மூடித்தனமாக மக்கள் கூடலாமா? அப்படியே மக்கள் கூடினாலும் அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே யோசித்து எடுக்க வேண்டும் அல்லவா? என்பதற்கான கேள்விகள் பலராலும் எழுப்பப்பட்டு வந்தாலும், முறையாக கூட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைக்காத தவெக நிர்வாகிகள் மீது அனைத்து தரப்பினராலும் குற்றம்சாட்டப்படுகிறது.

24

குறிப்பாக தவெக தலைவர் விஜய் சரியான நேரத்துக்கு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வராததும், இவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல், உடனே கரூரில் இருந்து சென்னை திரும்பியதும் விஜய் மீது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் மீது தமிழக அரசு பதிந்துள்ள வழக்குகளும், நியமித்துள்ள விசாரணை ஆணையமும் அக்கட்சிக்கு நெருக்கடியாக மாறியுள்ளது, சந்தேகங்களையும் கிளப்பி இருக்கிறது.

திமுக- தவெகவுக்கு இடையேயான யுத்தத்தை கரூர் சம்பவம் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிற நிலையில், டெல்லி இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்டத்தில் இறங்கியுள்ளது. கரூர் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தமிழக அரசிடம் இருந்து தன்னுடைய உள்துறை அமைச்சகம் மூலமாக அறிக்கையை கேட்கச் சொன்னார் அமித் ஷா. மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை தவெக அணுகும் முன்னரே இது நடந்தது. தொடர்ந்து ஆளுநரும், தமிழக அரசிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பாக விவரங்களை கேட்டுள்ளார்.

34

இதற்கிடையில், தேசிய மனித உரிமை ஆணையம் விவரங்களை கேட்க வேண்டும், உரிய விசாரனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார் தவெக முன்னணி தலைவர்களில் ஒருவரும், பாஜகவில் முன்பு நிர்வாகியாக இருந்தவருமான நிர்மல் குமார். இந்தப் பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை செய்யுமாறு விஜய் தரப்புக்கு ஆலோசனை சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியை, விஜய் சந்திக்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால், விஜய் அதற்கு தயங்கிய நிலையில், சந்திக்க தனது தரப்பினரை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

44

காரணம், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தொடக்க முதலே தவெகவை இணைக்க முயற்சித்தும் வந்தது. ஆனால், விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து விமர்சித்து வந்தார். பாஜகவை கொள்கை எதிரியென்றும், திமுகவை அரசியல் எதிரி என்றும் வரையறுத்தார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடுத்தடுத்த காய் நகர்த்தல்களை டெல்லியில் ஆரம்பித்துவிட்டன.

இதை அறிந்து கொண்டு தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினோடு பேசிய கையோடு, தவெக தலைவர் விஜயை தொடர்பு கொண்டும் பேசி இருக்கிறார்’’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய டெல்லி வட்டாரத்தினர்.

Read more Photos on
click me!

Recommended Stories