விஜய்யா இப்படி..? ‘அணில்’ வெடியை வாயில் கடித்து ரோதனை..! ரசிகக் குஞ்சுகளை கஷ்டப்படுத்தி வேதனை..! அதிர வைக்கும் மறுபக்கம்..!

Published : Sep 29, 2025, 02:12 PM IST

விஜய் யார் சொல்லியும் கேட்காமல் கேரவன் வாசலில் நின்று அருகில் வருமாறு அவர்களை நோக்கிக் கையசைத்து இருக்கிறார். ரசிகர்களான சிறுவர்கள் முண்டியடித்து ஓடி மண்டைக் காயங்களோடு வந்து விழுந்த சமயத்தில் கேரவனுக்குள் புகுந்து கொண்டாராம். 

PREV
14

கரூர் கூட்ட நெரிசலில் மூச்சுத்திணறி 41 உயிர்கள் பலியானதற்கு காரணம் குறித்த நேரத்திற்கு வராமல் விஜய் தாமதப்படுத்தியதே காரணம் என காவல்துறையினரும், தமிழக அரசும் குற்றம்சாட்டிருகின்றன. ஏற்கெனவே அவரது கட்சி நிகழ்ச்சிகளில் பவுன்சர்கள் தொடர்பான சம்பவங்கள் பல்வேறு விவாதங்களை கிளம்பி இருக்கின்றன. "பவுன்சர்களை வைத்து ரசிகர்களை துன்புறுத்தும் விஜய்" என பல சர்ச்சைகள் விஸ்வரூபமெடுத்தன.

இந்நிலையில் உண்மையில் விஜய் ரசிகர்களை எப்படி கையாள்கிறார் என முந்தைய சம்பவங்களை பகிர்ந்துள்ளார் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சரவணன் சந்திரன். அவரது முகநூல் பதிவில் விஜய் குறித்து பகிர்ந்துள்ள தகவல் பகீர் கிளப்புகிறது.

24

அவரது பதிவில், ‘‘ஒருமுறை அந்த நடிகரிடம், சிறப்பிதழ் பணிக்காகச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அது ஒலிப்பதிவாகவும் என்னிடம் இருக்கிறது. பாண்டிச்சேரியில் ஒரு பையனைப் பார்த்தேன். சட்டையின் அத்தனை பட்டன்களையும் கழற்றி விட்டு, உள்ளே சிவப்பு நிற பனியன் போட்டிருந்தான். வலதுகையில் சிவப்புநிறக் கைக்குட்டை ஒன்றைக் கட்டியிருந்தான். நிச்சயமாகப் போதையும் உண்டு. அவனை மறித்த ஆட்டோ ஒன்றின் முன்பக்க கண்ணாடியைக் கையால் ஓங்கிக் குத்தி உடைத்துவிட்டு, கையை உதட்டில் வைத்து முத்தம் தருவதைப் போல ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, ரத்தம் சொட்டுவதைக்கூடப் பொருட்படுத்தாமல் சாலையைத் தாண்டிக் குதித்து ஓடினான்.

இந்தச் சம்பவத்தைச் சொல்லி, "ஏங்க.. கண்ணாடியை எல்லாம் இப்படி உடைக்கக் கத்துக் கொடுக்கக் கூடாது" என்றேன் அவரிடம். பதறுவார் அவரென எதிர்பார்த்தேன். ஆனால் பதில் பேசாமல் ரசித்துப் புன்னகைத்துக் கொண்டார்.

இன்னொருமுறை மூத்த நடிகை ஒருத்தர் அந்த நடிகர் குறித்து ஒரு விஷயத்தைச் சொன்னார். குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடுவது போலக் காட்சி. ஜம்போ அணில் வெடியை வாயில் வைத்துத்தான் பற்ற வைப்பேன் என அடம் பிடித்தாராம். "ஏம்ப்பா... இதைப் பார்த்துட்டு எல்லா பயல்களும் இதை செஞ்சிட்டு வாயே இல்லாம அலைய போறானுகப்பா. வேண்டாம் விட்டிரு" என நடிகை கெஞ்சிய பிறகுதான் விட்டாராம். ஆனாலும் வெடியைக் கவ்வாமல் வாய்க்குப் பக்கத்தில் வைத்துப் பற்ற வைத்த பிறகே திருப்தியானாராம்.

34

அப்புறம் கடைசியாய் ஒரு கதை. சினிமாக்களுக்கு எல்லாம் பவுன்சராக பணிபுரியும் நண்பர் சொன்னார். ஒருதடவை படப்பிடிப்பில் நடிகர் கேரவனில் இருந்திருக்கிறார். தூரத்தில் ரசிகர்கள் குவிந்து இருந்து இருக்கின்றனர். வெளியே தலைகாட்டினால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என எச்சரித்து இருக்கின்றனர்.

ஆனால் யார் சொல்லியும் கேட்காமல் கேரவன் வாசலில் நின்று அருகில் வருமாறு அவர்களை நோக்கிக் கையசைத்து இருக்கிறார். ரசிகர்களான சிறுவர்கள் முண்டியடித்து ஓடி மண்டைக் காயங்களோடு வந்து விழுந்த சமயத்தில் கேரவனுக்குள் புகுந்து கொண்டாராம்.

44

உள்ளே இருந்தவரிடம் "பார்த்தீயா என் ‘பவரை..." எனச் சொன்ன போது, நடிகருக்குப் பாதுகாப்பாய் நின்று இருக்கிறார் அந்த பவுன்சர். வெளியே ரசிகர்களை மிச்சமிருக்கிற பவுன்சர்கள் செல்லமாய் பந்தாடினார்களாம். உள்ளே குதூலமாக அமர்ந்து இருந்தாராம் மேற்படியார்.

இதுமாதிரி சின்ன வயதில் இருந்தே அவர் செய்த பல சமூக சேவைகளைக் கண்டு இருக்கிறேன். உண்மையிலேயே சமூகத்திற்குச் சேவை செய்ய இப்போது களம் இறங்கி இருக்கிறார். அதையும்தான் பார்த்து விடுவோமே? ஏனோ பதிவு செய்யத் தோன்றியது. மற்றபடி வேறொன்றும் இல்லை. 

வெயிட்டிங்...! "குட்டையோ நெட்டையோ, நம்மால் தொட்டுத் தழுவிப் பார்க்க முடிகிற தலைமையே நமக்குத் தேவை" என தெரிவித்துள்ளார். அவர் பெயர் குறிப்பிடாமல் ஒரு நடிகர் என்று கூறினாலும் அவர் சுட்டிக்காட்டும் அந்த நடிகர் விஜய் என்பதை வேறு சில வகைகளில் உறுதிப்படுத்திக் கொண்டோம். அதற்கான வீடியோ பதிவுகளும் சாட்சியங்களாக உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories