பின்னர், தாடி பாலாஜி ஒரு வீடியோவில் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எதேச்சையாக பதிவிடப்பட்டது என்றும், விஜய்யை விமர்சிக்கும் நோக்கம் இல்லை என்றும், அவர் விஜய்யின் நண்பராகவே பணியாற்றுவதாகவும் தெளிவுபடுத்தினார். தாடி பாலாஜி, தவெகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, திருவள்ளூரில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். விஜய்யின் நற்பணிகளுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பேன் என்று கூறி வருகிறார். இந்நிலையில் மதுரையில் நடந்த தவெக மாநாடு குறித்தும், விஜய் ஆற்றிய உரையை பற்றியும் விமர்சித்துள்ளார்.
‘‘தமிழகத்தை காக்க வந்த தலைவா..! முதலில் உங்களுடன் இருப்பவர்களிடம் இருந்து உங்களை காப்பாற்ற வேண்டும்’’ என பதிவிட்டு இருந்தார். இது குறித்து பேசிய தாடி பாலாஜி, ‘‘விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. மாநாட்டில் அத்தனை லட்சம் பேர் விஜய் என்ன பேசுவார் என்பதை பார்க்க வருகிறார்கள். ஆனால், விஜயின் பேச்சு விக்கிரவாண்டி மாநாட்டில் அமைந்தது போல் இல்லை. அவரது பேச்சு டல்லாகிவிட்டது. முதல் மாநாட்டில் பயங்கர பவராக பேசினார். ஆனால் இந்த மாநாட்டில் அவரது பேச்சு சுத்தமாக டல்லடித்து விட்டது. அதனால், நான் தனிப்பட்ட முறையில் அப்செட் ஆகி விட்டேன்.