சிவனும், சக்தியும் சேர்ந்தா மாஸ்-டா..! செங்கோட்டையன் வரவால் துள்ளிக்குதிக்கும் தவெக தொண்டர்கள்..!

Published : Nov 27, 2025, 11:19 AM IST

ஓ.பன்னீர்செல்வமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்துள்ளார். அதற்குப் பிறகு, அவர் தனி கட்சி தொடங்குவாரா? அல்லது கே.ஏ.செங்கோட்டையனைப் போல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும். 

PREV
14

அரசியலில் யாரும் எதிர்பார்காத டிவிஸ்டாக தவெகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்கு நிர்வாக குழு ஒருங்கினைப்பாளர் பதவி , ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததால் மூத்த தலைவரும், 50 ஆண்டு கால அதிமுக உறுப்பினருமான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். செங்கோட்டையன் நீக்கப்பட்ட பிறகு, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று கூடி, டிடி.வி. தினகரன், சசிகலா ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.

24

அனைவரும் மீண்டும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மட்டும் 8 முறை போட்டியிட்டு 8 முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் செங்கோட்டையன். பள்ளிக்கல்வி, வனம், வருவாய், விவசாயம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் காலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின்பு மாலை தவெக தலைவர் விஜய்யுடன் சந்திந்து பேசினார். இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளரான அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பனையூர் அலுவலகம் வந்துள்ளனர்.

34

முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன், முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோர் இணைகின்றனர்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு முக்கிய நிர்வாகியான ஓ.பன்னீர்செல்வமும் வரும் டிசம்பர் 15ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்குக் கெடு விதித்துள்ளார். அதற்குப் பிறகு, அவர் தனி கட்சி தொடங்குவாரா? அல்லது கே.ஏ.செங்கோட்டையனைப் போல் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவாரா என்பது விரைவில் தெரியவரும்.

44

இந்நிலையில் செங்கோட்டையனின் தவெக வரவை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். ‘‘எம்ஜிஆர் காலம் தொட்டு அரசியலில் பயணித்து, மக்கள் மரியாதையைப் பெற்ற மூத்த அரசியல்வாதி அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததற்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளும், வரவேற்பும்! எனக்கூறி ஜில்லா படத்தில் விஜய்- மோகன் லால் இணைணந்து தோன்றும் சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா’ புகைப்படத்தை சித்தரித்து விஜயுடன் செங்கோட்டையன் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories