தவெகவின் தூணாகும் செங்கோட்டையன்..! பனையூர் இல்லத்தில் குவியும் தலைவர்கள்..! உற்சாகத்தில் விஜய்..! உற்சாகத்தில் விஜய்..!

Published : Nov 26, 2025, 04:45 PM IST

எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த பிறகு சென்னை, மவுண்ட் ரோடு பகுதியை செங்கோட்டையினுடைய கார் வட்டம் அடித்தது. இந்நிலையில் அவர் விஜய சந்திப்பாரா? அல்லது அதற்கு முன்னதாக அறிவாலயம் செல்வாரா என்கிற குழப்பம் ஏற்பட்டது.

PREV
14

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் அடுத்து எங்கு செல்கிறார்? என்கிற எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், விஜயின் பனையூர் இல்லத்தில் தவெக தலைவர்கள் ஓன்றுகூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டையன் நாளை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவதாக கூறப்படுகிறது. அவர் விஜய்யை ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தவெகவில் மாநில அளவில் அமைப்புப் பணிகளுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தவெக ஆதரவாளர்கள் இதற்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

24

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் -திமுக அமைச்சர் சேகர் பாபு இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். செங்கோட்டையனை திமுகவில் இணைக்கவே இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் செங்கோட்டையன் பிடிகொடுக்காமல் பேசியுள்ளார். அவரை எப்படியும் திமுகவில் இணைத்து விட வேண்டும் என்கிற முடிவில் இருந்து வருகிறது திமுக. அடுத்து, செங்கோட்டையனின் லைனுக்கு இரண்டு முறை வந்துள்ளார் மு.க.ஸ்டாலின். அப்போது, உங்களுக்கு என்ன தேவை. உங்களை போன்ற அனுபவமுள்ள சீனியர்கள் திமுகவுக்கு வந்தால் நல்லது. நீங்கள் என்ன கோரிக்கை வைத்தாலும் நாங்கள் செய்து தருகிறோம்’’ என கேட்டுக் கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதற்கு முன் சில திமுக சீனியர் தலைவர்கள் நேற்று இரவு முதல் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

34

ஆனால், செங்கோட்டையனோ, "இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள்" என மறுப்பு தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார். திமுகவினர் பலர் பேசினாலும் செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முடிவெடித்துவிட்டார். இதற்கு காரணம், செங்கோட்டையன் "திமுகவின் பி-டீம்" என்று எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி வந்தார். அந்த வதந்தி தன்னால் உண்மையாகி விடக்கூடாது என்பதால் செங்கோட்டையன் திமுகவை தவிர்க்கிறார் என்கிறார்கள். இந்நிலையில் நாளை தவெகவில் செங்கோட்டையன் இணைவது உறுதி எனக்கூறப்படுகிறது.

எம்எல்ஏ பதவியே ராஜினாமா செய்த பிறகு சென்னை, மவுண்ட் ரோடு பகுதியை செங்கோட்டையினுடைய கார் வட்டம் அடித்தது. இந்நிலையில் அவர் விஜய சந்திப்பாரா? அல்லது அதற்கு முன்னதாக அறிவாலயம் செல்வாரா என்கிற குழப்பம் ஏற்பட்டது. அவரது அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது. இந்நிலையில், விஜயின் பனையூர் இல்லத்தில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

44

ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர் தேர்வை நடத்தி வருகின்றன. திமுக அதி தீவிரமாக தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவில் இருந்து முக்கியமான நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கும் அதிமுக தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறது. விஜய் கூறி வருவது போல் திமுகவுக்கும்- தவெகவுக்கும் தான் நேரடி போட்டி என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories