திமுகவை தனியாக வீழ்த்த முடியும் என நினைப்பது விஜயின் அடிமுட்டாள்தனம்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ்.மணி

Published : Nov 26, 2025, 11:45 AM IST

திமுகவுக்கு எதிராக விஜய் குற்றச்சாட்டுகளை வைத்தால் மக்கள் அதை பார்க்கிறார்கள். நம்பகத்தன்மை குறைந்து விடும். மக்கள் அதிமுக சொல்வதை நம்ம மறுக்கிறார்கள். ஏனென்றால் இன்ன்ம் நான்கு மாதத்தில் இந்த அரசு முடியப்போகிறது.

PREV
14

விஜய் தனித்து நின்று திமுகவை தோற்கடிக்க முடியாது. அது ஜெயலலிதா, கருணாநிதியால் கூட நடந்தது இல்லை. அவரது திமுக எதிர்ப்பு தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு உதவுவதாக மாறிவிடும் என பத்திரிக்கையாளர் ஆர்.எஸ்.மணி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளை நாடி போவதற்கு காரணம் தேர்தல் அன்று, திமுக அதிமுக இல்லையென்றால் ஓட்டு பூத்துக்கு வராது. பூத்டுக்கு வந்தாலும் பெட்டியில் விழாது.விஜய் தன்னை இன்னொரு பெரிய தலைவராக நினைத்து பெரிய தவறை செய்து கொண்டு இருக்கிறார். தன்னோட பவரால் தனியாக திமுகவை விழ்த்திவிட முடியும். தான் மட்டும்தான் திமுகவை வீழ்த்த முடியும் என நினைப்பது என்னை பொறுத்த வரை அடி முட்டாள்தனமானது. அவ்ளோ பெரிய தலைவர் ஜெயலலிதா 10 கட்சிகளுடன் சேர்த்துதான் திமுகவை வீழ்த்தினார். எம்ஜிஆர் பல கட்சிகளுடன் சேர்ந்துதான் திமுகவை வீழ்த்தியிருக்கிறார்.

24

கலைஞர் எவ்ளோ பெரிய தலைவர்? இந்திய அரசியலிலே ஒரு 50 வருஷம் தன்னை சுற்றி சுழல வைத்த பெரிய தலைவர். அவர் எப்படி வெற்றி பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை 10 கட்சிகளை சேர்த்து கூட்டணி வைத்து தான் வீழ்ததினார்.

இவர்கள் இரண்டு பேருமே கூட்டணியை அமைத்து தான் ஒருத்தரை ஒருத்தர் வீழ்த்தி இருக்கிறார்கள். 2016 தேர்தலை விட்டு விடுங்கள். அப்போது அதிமுகவுடன் சின்னச் சின்ன கட்சிகள் கூட்டணியில் இருந்தது. திமுகவை வீழ்த்துவது உங்களது நோக்கம் என்கிறீர்கள். என்னுடைய எதிரி திமுக என்கிறீர்கள். திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி என்கிறீர்கள்.

வரலாறில் இருந்து பாடம் கற்க மறுக்கிறவர்கள் தவறுகளை திரும்பத் திரும்ப செய்வார்கள். வரலாறில் இருந்து தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். தனியாக திமுகவை ஆனானப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதாவுமே வீழ்த்த முடியவில்லை என்கிறபோது விஜய் மட்டும் எப்படி வீழ்த்துவார்? வீழ்த்த வேண்டும் என்கிற முக்கிய விஷயத்தில் கூட்டணி இல்லாமல் விஜயால் அதை சாத்தியப்படுத்தவே முடியாது.

34

இதில் இருக்கிற சிக்கல் என்ன்வென்றால் அதிகமாக திமுகவுக்கு எதிராக பேசினீர்கள் என்றால் ஜெயலலிதா எதிராக மேற்கொண்ட சுப்ரமணியசாமி, வாழப்பாடி ராமமூர்த்தி மேற்கொண்ட அரசியல் வளர்த்தீங்கள், சுப்ரமணியசாமி சட்டப்படி ஜெயலலிதாவுக்கு எதிராக போட்ட வழக்குகள் எல்லாமே மக்கள் மனதில் பதிந்தது. திமுக அப்போது ரொம்ப வீக்காக இருந்தது. கலைஞர் வந்து அப்போ ரொம்ப வீக்காக இருந்தது. திமுகவை விட்டு வைகோ பிரிந்து சென்றார். அப்போது நாடாளுமன்றத்டில் பரிதி மட்டுமே இருந்தார். ஆனால் கடைசியில்என்ன ஆச்சு? கடைசி ஒரு மாதத்தில் மூப்பனார் திமுக கூட்டணிக்கு போய் விட்டார். வாழப்பாடி ராமமூர்த்தியும் பாமகவுக்கு போய்விட்டார். அறுவடை செய்தது யார்? அதே நிலைமை விஜய்க்கு வராது நீங்கள் எப்படி சொல்வீர்கள்?

நீங்க அதிகமாக திமுக எதிர்ப்பு பற்றி பேசிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேர்தல் நேரத்தில் அடு உங்களுக்கு மாறாக அதிமுகவுக்கு சென்று விடும். ஆனால் திமுக மீது இவர் வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களும் அதிமுகவும் பத்தாண்டுகள் ஆட்சி பொறுப்பிலிருந்த கட்சி. கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி. கிட்டதட்ட அவங்களுக்கும் பொருந்துகிற மாதிரி தான் இந்த விமர்சனங்களை வைக்கிறார். அதற்கு முன்னால் இருக்கிறவர்ளுக்கு பொருந்தவே பொறந்தது. அதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது யார் பவரில இருக்கிறார்களோ அதுதான். அதற்கு முன்னால் 5 வருஷம், 10 வருஷம் இருந்ததெல்லாம் கணக்கில் வராது.

44

இப்போது திமுகவுக்கு எதிராக அவர் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் மக்களால் கவனிக்கப்படுகிறது. திமுகவுக்கு எதிராக விஜய் குற்றச்சாட்டுகளை வைத்தால் மக்கள் அதை பார்க்கிறார்கள். நம்பகத்தன்மை குறைந்து விடும். மக்கள் அதிமுக சொல்வதை நம்ம மறுக்கிறார்கள். ஏனென்றால் இன்ன்ம் நான்கு மாதத்தில் இந்த அரசு முடியப்போகிறது. விஜய் திமுக எதிர்ப்பை அதிகமாக பேசப்பேச அறுவடை பண்றது அதிமுக கையில் போய் விழுந்துவிடும். அந்த ரிஸ்க் இருக்கிறது. இது 1996ல் நடந்தது. அதைத்தான் நான் உங்களுக்கு சொல்றேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories