திருப்பதி லட்டு தயாரிப்பில் மோசடி..! போலி நெய்யை கலந்த வியாபாரி அதிரடி கைது..!

Published : Nov 10, 2025, 06:12 PM IST

அஜய் குமார் மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்யப்பட்டு, பின்னர் திருப்பதிக்கு சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

PREV
13

திருமலை திருப்பதி தேவஸ்தானம் லட்டு நெய் கலப்பட வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு டெல்லியைச் சேர்ந்த ரசாயன வியாபாரி அஜய் குமார் சுகந்தாவை போலி நெய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் 16வது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அஜய் குமார், போலேபாபா பால் பண்ணை இயக்குநர்கள் போமில் ஜெயின் மற்றும் விபின் ஜெயின் ஆகியோருடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றியதாகவும், தனியார் பால் லேபிள்களின் கீழ் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்படும் நெய்யைக் கலப்படம் செய்யப் பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

23

சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் இது குறித்து, வியாபாரி பாமாயில் பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் மோனோகிளிசரைடுகள், அசிட்டிக் அமிலம் மற்றும் எஸ்டர்கள், பாமாயில் பதப்படுத்தலில் பயன்படுத்தப்படும் பொருட்களை கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக போலேபாபா பால்பண்ணைக்கு வழங்கி வந்தார். தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு டெல்லியை தளமாகக் கொண்ட ஒரு நெட்வொர்க் மூலம் விநியோகிக்கப்பட்ட இந்த இரசாயனங்கள், அஜய் குமாரின் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டு, பால் உற்பத்தி பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டன.

தூய நெய்போன்று நறுமணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாமாயிலை ரசாயனங்களுடன் கலப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட கலப்பட நெய், வைஷ்ணவி, ஏ.ஆர். டெய்ரி என்ற பிராண்ட் பெயர்களில் விநியோகிக்கப்பட்டு, பின்னர் புனித திருப்பதி லட்டுகளில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். பிரபலமான திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை பாமாயில் மற்றும் ரசாயன சேர்க்கைகளுடன் கலக்கப்பட்டிருப்பதை சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் கண்டறிந்துள்ளது.

33

தடயவியல் குழுக்கள் நடத்திய ஆய்வக சோதனைகள் பால் சார்ந்த நெய்யுடன் பொருந்தாத செயற்கை கலவைகள் இருப்பதை உறுதிப்படுத்தின. மாநிலங்கள் முழுவதும் பல இடைத்தரகர்கள் சம்பந்தப்பட்ட நீண்டகால விநியோக மோசடியை இந்த கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தின. செப்டம்பர் 2024 -ல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முந்தைய அரசின் திருமலை திருப்பதி தேவஸ்தான லட்டு உற்பத்தியில் விலங்கு கொழுப்பு கொண்ட கலப்பட நெய்யைப் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம் சாட்டியபோது இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த மோசடி பொதுமக்களின் கோபத்தை தூண்டின. இந்த விஷயத்தை விசாரிக்க நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்தது.

அஜய் குமார் மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லியில் கைது செய்யப்பட்டு, பின்னர் திருப்பதிக்கு சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories