ஆப்பிரிக்க அதிபரையே அந்த நாட்டு சீமான்னுதான் புகழ்றாங்க..! என்னைப்பார்த்த சிரிக்கிறீங்க..? கெத்துக்காட்டும் சீமான்..!

Published : Sep 26, 2025, 02:40 PM IST

இந்த ஒப்பீடு வேடிக்கையானதாக இருக்கலாம், ஆனால் இருவரும் தங்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடும் தலைவர்கள். சீமான் தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர், டிராரே ஆப்பிரிக்க ஐக்கியத்தை முன்னிறுத்துபவர்

PREV
13
சீமானின் தற்பெருமைகள்..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் சீமான் தனது பேச்சுகளிலும், அரசியல் செயல்பாடுகளிலும் அடிக்கடி தனது சாதனைகளையும், தமிழர் இயக்கத்தின் வெற்றிகளையும் தற்பெருமையுடன் வெளிப்படுத்திக் கொள்பவர், அவரது பேச்சுகள் பெரும்பாலும் தமிழ் தேசியம், ஈழத் தமிழர் உரிமைகள், தனித்துப் போட்டி என மையமாகக் கொண்டிருக்கும்.

சீமான் தனது கட்சியின் தனித்துப் போட்டி அணுகுமுறையால், 2016 முதல் 2021 வரை வாக்கு சதவீதத்தை 1% இலிருந்து 8% ஆக உயர்த்தியதை அடிக்கடி சுட்டிக்காட்டு பெருமை படுவார். "அந்நிய சக்திகளுக்கு எதிராக போராடி, 3 மில்லியன் வாக்காளர்களைப் பெற்றோம்" என தம்பட்டம் அடித்துக் கொல்வார். "நான் மாறவில்லை, ஆனால் அரசியல் களத்தை மாற்றினேன். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைப் போல உண்மையான விசுவாசத்துடன் போராடி வருவதாக தற்பெருமை பொங்கச் சொல்கிறார். "தமிழர் ஆட்சி"க்காக தனித்துப் போட்டியிடுவதை அவர் பெருமையுடன் சொல்கிறார். 2016, 2019, 2021 தேர்தல்களில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதை "தமிழ் தேசியத்தின் வெற்றி" என்று அழைக்கிறார்.

23
பிரபாகரனுடன் ஆமைக்கறி சாப்பிட்ட சீமான்

பணத்திற்காக ஓடாமல், 60 வயதிலும் தமிழுக்காக போராடுகிறேன்" என்று அவர் தன்னை "சுத்தமான போராளி" என்று போற்றுவார். 8% வாக்குகளைப் பெற்றதை "தமிழ் இரத்தம் மற்றும் சித்தாந்தத்தின் வெற்றி" என்று கூறுவார். "திராவிடம், ஆரியம் ஆகியவற்றை எதிர்த்து தமிழ் தேசியத்தை எழுப்பினோம்" என தற்பெருமுடன் கொண்டாடுகிறார்.

சீமான் தனது பேச்சுகளில், பிரபாகரனை நேரில் சந்தித்ததாகவும், அவருடன் இட்லி சாப்பிட்டதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் கூறி அவருடனான நெருக்கத்தை தம்பட்டம் அடித்துக் கொள்வார். கடந்த ஜனவரி மாதம், சீமானுடன் பிரபாகரன் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இந்தப் புகைப்படத்தை எடிட் செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் கூறுகையில், ‘‘சீமானின் நெருங்கிய நபர் ஒருவர், பிரபாகரனுடன் இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோரின் பழைய புகைப்படங்களை கொண்டு வந்தார். சீமானின் படத்தை அதனுடன் இணைத்து எடிட் செய்தார். சீமானுக்கு நிழல் சேர்த்து, பிரபாகரனுக்கு நிழல் இல்லாமல் விட்டது போன்ற தவறுகள் உள்ளன. இது சீமானுக்கு "நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த" உதவும் என்ற நோக்கில் செய்தேன், ஆனால் சந்திப்பு நடந்ததா என எனக்கு தெரியாது’’ என போட்டுடைத்தார்.

33
என்னை பார்த்தா சிரிக்கிறீர்கள்?

பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் கூறுகையில், ‘‘சந்திப்பு உண்மையானது என்று சிலர் கூறினாலும், சீமான்-பிரபாகரன் இடையே நெருக்கமான உறவு இல்லை. சீமானை அப்போது பிரபாகரனுக்கு தெரியாது’’ என்றும் கூறினார்.

எல்டிடி ஆவணப்படம் எடுத்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ், "பிரபாகரனுக்கு சீமான் யாரென்றே தெரியாது" என்று கூறினார். சீமான் இதை அவதூறு என மறுத்து, "15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனுடன் எடுத்த படம் வெளியாகிவிட்டது" என்று கூறி, பெரியார் vs பிரபாகரன்" விமர்சனத்துடன் இணைத்து விவாதத்தை திசைதிருப்பினார்.

இந்நிலையில், “உலக அரசியலை உள்ளங்கையில் வைத்திருப்பவர்கள் நாங்கள். எதையும் பார்த்து படிக்கும் கட்சி அல்ல. நான் இங்கு பேசுவதை அங்கு பேசுவதற்காக ஆப்பிரிக்க அதிபர் இப்ராஹிம் டிராரேவை, அந்த நாட்டு சீமான் என புகழ்கின்றனர். இங்கேயோ என்னை பார்த்து சிரிக்கிறீர்கள்’’ என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது விவாதங்களை கிளப்பி உள்ளது.

இந்த ஒப்பீடு வேடிக்கையானதாக இருக்கலாம், ஆனால் இருவரும் தங்கள் மக்களின் சுதந்திரத்திற்காக போராடும் தலைவர்கள். சீமான் தமிழ் தேசியத்தை வலியுறுத்துபவர், டிராரே ஆப்பிரிக்க ஐக்கியத்தை முன்னிறுத்துபவர்’’ என பெருமையடித்து வருகிறார்கள் நாம் தமிழர் கட்சி தம்பிகள்.

Read more Photos on
click me!

Recommended Stories