நயினாருக்கு எதிராக கோயல் கொடுத்த ரிப்போர்ட்... கடுப்பான டெல்லி பாஜக..! ஓபிஎஸ்- டிடிவிக்கு ஸ்ட்ராங் மெசேஜ்..!

Published : Dec 29, 2025, 04:38 PM IST

தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு கூட்டத்தில என்னென்ன விஷயங்கள் பேசப்பட வேண்டும் என்பதையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்கிறார். அந்த அளவுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  இணக்கமாக நட்பு பாராட்டுகிறார்.

PREV
14

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜகவும், அதிமுகவும் ஏப்ரல் 2025-ல் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் என்டிஏ நடத்தும் என அறிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதை உறுதிப்படுத்தினார். ஆனால், தற்போது கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தால் சில சவால்களும் எதிர்க்கொண்டு வருகின்றன.

டிசம்பர் 23-ஆம் தேதி, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கடந்த முறையைவிட பாஜக அதிக தொகுதிகளை டிமாண்ட் வைத்துள்ளது. பாமக, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் ஆகியோரை மீண்டும் என்டிஏ-வில் சேர்க்கும் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் அதிமுக வியூக வகுப்பாளர்கள் முந்திரிக்கொட்டை தனமாக வெளியிட்ட சீட் லிஸ்ட் வெளியானது. இதனால், வெறுப்பான ஓ.பி.எஸ், டிடிவி.தினகரன், பிரேமலதா ஆகியோர் அதிமுக மீது அதிருப்தியாகி மாற்று கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

24

ஆனால், பாஜக அவர்கள லேசாக விட்டுவிடுமா என்கிற கேள்வியும் எழுகிறது. அதிமுக-பாஜக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்பிரதாயத்துக்கு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிவிட்டு சென்றார் பியூஸ் கோயல். ஆனால், அவர் டெல்லியிடம் கொடுத்த ரிப்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியமானது என்கிறார்கள். ‘‘தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், அதிமுக பிஜேபியின் அடிமையாக இருக்கிறது என ஒவ்வொரு மேடையிலும் அவர் கலந்து கொள்கிற ஒவ்வொரு விழாக்களிலும் அதிமுகவை பிஜேபியின் அடிமை என்றுதான் விமர்சித்து வருகிறார். ஆனால், உண்மை என்னவென்றால் தமிழ்நாடு பாஜக தான் அதிமுகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் நமது தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு கூட்டத்தில என்னென்ன விஷயங்கள் பேசப்பட வேண்டும் என்பதையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்கிறார். அந்த அளவுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் நலனை தாண்டிய தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நலனை தாண்டி இணக்கமாக நட்பு பாராட்டுகிறார். ஆகையால், இனி நயினாரை நம்பி இந்த பயணம் இருக்கக்கூடாது. டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை நாம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அழைத்து வந்தால் மற்ற சின்னச் சின்ன கட்சிகள் எல்லாம் வந்து விடுவார்கள்’’ என பாஜக தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளதாக தகவல்.

34

இதனையடுத்தே ஓ.பி.எஸ், டிடிவி. தினகரனுக்கு பாஜக தலைமையில் இருந்து தரப்பில் ஒரு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. ‘‘தேர்தலுக்கு முன்பு இருக்கிற நிலைமையை வைத்து நீங்கள் ஒரு முடிவுக்கு வராதீர்கள். 2026 ஓ.பி.எஸுக்கோ, டிடிவி. தினகரனுக்கோ தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என்ற ஒரு நிலை கூட வரலாம். அப்படிப்பட்ட ஒரு வரலாறு உங்களுக்கு காத்திருக்கிறது. அதை நீங்கள் மிஸ் பண்ணிடாதீங்க. 1980களில் இருந்து அம்மாவுக்கு நாங்கதான் உறுதுணையாக இருந்தோம். அப்போது திமுக அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையில் அம்மா தாக்கப்பட்டபோது நாங்கள் தான் அவருக்கு உறுதுணையாக இருந்தோம் என்று சொல்லி வருகிறீர்கள்.

ஓ.பி.எஸ் அம்மாவின் தீவிரவிசுவாசி. ஜெயலலிதா அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் இருமுறை முதல்வர் படவி வழங்கி்னார். மூன்று முறை முதல்வராக பதவியேற்றவர். அப்படிப்பட்ட நீங்கள் இருவரும் எம்ஜிஆரின், ஜெயலலிதாவின் ஜென்ம எதிரியான, விரோதியான திமுக பக்கம் போய் விடக்கூடாது.

44

இன்னொரு பக்கம் கிட்டத்தட்ட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என்றெல்லாம் பெரிய பெரிய நீண்ட ஜனநாயக அனுபவம் உள்ளவர் தினகரன். அதேபோல முதல்வராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் ஓ.பி.எஸ். நீங்கள் இருவரும் இன்று முளைத்த விஜய் தலைமையில் போய் சேர்வதா? 2026 தேர்தலுக்குப் பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம், முன்னேற்றம் உங்களுக்கு இருக்கிறது என டெல்லி தரப்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவருக்கும் கொஞ்சம் அழுத்தமான ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories