தவெக தனித்து களம் காணுமா? ஒரே நிபந்தனையுடன் கூட்டணி அமைக்குமா? அரசியல் சூழல் மாற்றத்தை உருவாக்குமா?
என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவாகிறது, தவெக எந்த சூழலிலும் தங்கள் அரசியல் அடையாளத்தை இழக்கத் தயாராக இல்லை. எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் மையமாக இருந்தது “திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” என்பதே. ஆனால் தவெக தரப்பின் பதில், இதைத் தாண்டி செல்கிறது.
திமுக எதிர்ப்பு மட்டுமே போதாது, மாற்று அரசியல் தெளிவாக இருக்க வேண்டும். தலைமை யார் என்பது உறுதியாக வேண்டும்
என்ற அடிப்படையில் தான் கூட்டணி சாத்தியம் என்ற நிலைப்பாடு வலுவாக முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் களத்தில் தவெக உருவாக்கும் புதிய அத்தியாயம் தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக, கூட்டணிகளில் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் பின்னணி, சமரச அரசியல் என்றே பார்த்து வந்த நிலையில், தவெக முதல்வர் வேட்பாளர் நிபந்தனையுடன் அரசியல் பேசுவது, புதிய அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி அழைப்புக்கு, தவெக கொடுத்த பதில் வெறும் மறுப்பு அல்ல, அது அரசியல் திசைகாட்டி, தலைமையைக் கோரும் அறிவிப்பு. 2026-க்கு முன் வெளியிடப்பட்ட அரசியல் அறிக்கை என்றே சொல்லலாம். தமிழக அரசியல் வரும் நாட்களில் எந்த திசையில் செல்லும் என்பது கேள்விக்குறி என்றாலும், ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற ஒரே கோட்டில் தவெக பயணிக்கிறது என்பது மட்டும் உறுதி.